அந்தியூரில் அரசு கலை கல்லூரி அறிவிப்பு: திமுகவினர் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்

அந்தியூரில் அரசு கலை கல்லூரி அறிவிப்பு: திமுகவினர் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்
X

அந்தியூர் பேரூராட்சி தலைவர் பாண்டியம்மாள் தலைமையில் திமுகவினர் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாடினர்.

அந்தியூரில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டதையடுத்து, அந்தியூர் பேரூராட்சி தலைவர் பாண்டியம்மாள் தலைமையில் திமுகவினர் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாடினர்.

ஈரோடு மாவட்டம் அந்தியூரில் அரசு கலை அறிவியல் கல்லூரி தொடங்க வேண்டும் என்ற கோரிக்கை நெடுநாட்களாக உள்ளது. இதனையடுத்து, அந்தியூர் திமுக எம்எல்ஏ ஏ.ஜி.வெங்கடாசலம், அரசு கலை அறிவியல் கல்லூரி தொடங்க வேண்டும் என சட்டப் பேரவை கூட்டத் தொடரில் வலியுறுத்தினார்.

அதன் பயனாக, அந்தியூரில் புதிதாக அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி தொடங்கப்படும் என, தமிழக சட்டப் பேரவையில் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி இன்று அறிவித்தார். இதனை வரவேற்று அந்தியூர் பேருந்து நிலையம் எதிரில் பேரூராட்சி தலைவர் பாண்டியம்மாள் தலைமையில் திமுகவினர் பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

இந்த நிகழ்வில் பேரூர் கழக துணைச் செயலாளர் ஏ சி பழனிச்சாமி, கெட்டிசமுத்திரம் முன்னாள் ஊராட்சி செயலாளர் நாகராஜ் மற்றும் பேரூராட்சி திமுக கவுன்சிலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
Similar Posts
7 மணி நேரம் தொடர்ந்து வேலை செய்யும் AI
அனுமதியற்ற தொழிற்சாலைகள் இடிக்கபட்டன - பவானியில் பரபரப்பு!
மருத்துவமனைக்கு பாதுகாப்பு தேவை : மக்கள் கோரிக்கை
ஈரோட்டில் ஆட்டோ டிரைவர், முதிய பெண்ணிடம் ரூ.1.44 லட்சம் மோசடி – மோசடியின் பெயரால் மனிதநேயம் கேள்விக்குறி!
கால்வாயில் மிதந்த சடலம் - சடலத்துடன் கண்டுபிடிக்கப்பட்ட அதிர்ச்சி தரும் உண்மை!
ஆப்பரேஷன் சிந்தூர் வெற்றிக்கு மரியாதை - நாமக்கலில் பேரணி
பைக் மீது பஸ் மோதிய விபத்தில் தம்பதியர் பலி
நகை திருட்டில் சிக்கிய திருச்சி இளைஞர்
கோவிலில் திருட முயன்ற திருடன் – நேரில் பிடிபட்ட பரபரப்பான தருணம்!
விசைத்தறி தொழிலாளர்களுக்கு வேலைநிறுத்தம்: மின்தடை காரணம்
சேலத்தில் மூதாட்டி பைக் மோதி பலி
மல்டி-லெவல் கார் பார்க்கிங் கட்டிட மாநகராட்சிக்கு நிதி இழப்பு குற்றச்சாட்டு
நீர்க்கிணறுகள், ஆபத்து கொண்ட செயலாக மாறும் முன்னெச்சரிக்கை!
ai solutions for small business