/* */

குண்டேரிப்பள்ளம் அணையின் நீர்மட்டம் உயர்வு

நீர்பிடிப்பு பகுதிகளில் கனமழை காரணமாக குண்டேரிப்பள்ளம் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது.

HIGHLIGHTS

குண்டேரிப்பள்ளம் அணையின் நீர்மட்டம் உயர்வு
X

குண்டேரிப்பள்ளம் அணை.

ஈரோடு மாவட்டம் கோபியை அடுத்த கொங்கர்பாளையம் கிராமத்தில் குண்டேரிப்பள்ளம் அணை உள்ளது. வனப்பகுதியை ஒட்டியுள்ள இந்த தடுப்பணையின் நீர் பிடிப்புப் பகுதிகளாக, குன்றி, விளாங்கோம்பை, மல்லியம் துருவம், கம்பனூர் உள்ளிட்ட வனப்பகுதிகள் விளங்குகின்றன. குண்டேரிப்பள்ளம் அணையில் 42 அடிவரை நீரினைத் தேக்கி வைக்கலாம். அணையில் இருந்து 2 ஆயிரத்து 498 ஏக்கர் நிலம் பாசனம் பெறுகிறது.



இந்நிலையில், கடந்த 2 மாதங்களுக்கு முன்பு அணையில் இருந்து பாசனத்துக்கு நீர் திறக்கப்பட்டது. இதனால் அணையின் நீர்மட்டம் வெகுவாக குறைந்தது.கடந்த சில நாட்களாக குண்டேரிப்பள்ளம் அணையின் நீர்பிடிப்பு பகுதியில் மழை பொழிவு காரணமாக, அணையின் நீர் மட்டம் வேகமாக உயர்ந்தது.தற்போது அணையின் நீர்மட்டம் 38.40 அடியாக உள்ளது. இன்னும் ஓரிரு நாட்களில் அணையின் நீர்மட்டம் முழு கொள்ளளவையும் எட்டும் என்பதால் பொதுப்பணித்துறையினர் அணையின் நீர்மட்டத்தை கண்காணித்து வருகின்றனர்.

Updated On: 30 Oct 2021 12:45 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    இருமனம் இணைந்து ஒரு மனமான திருமணம்..! அன்பூ தொடுத்த மாலை..!
  2. நாமக்கல்
    பாலியல் வழக்கில் 2 பேருக்கு தலா 40 ஆண்டுகள் சிறை: நாமக்கல் கோர்ட்டில்...
  3. தமிழ்நாடு
    முதுநிலை சேர்க்கைக்கான கடைசி தேதி செய்தி தவறு: புதுச்சேரி...
  4. இந்தியா
    அரசு பங்கு பத்திரங்கள் ஏலம்: மத்திய அரசு அறிவிப்பு
  5. தமிழ்நாடு
    வலிமையான கரியமிலவாயு உறிஞ்சிகளாக இந்திய பெருங்கடல், வங்காள விரிகுடா:...
  6. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா
  7. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே சுவையான மக்கானா கீர் செய்வது எப்படி?
  8. லைஃப்ஸ்டைல்
    ஏசி அறையில் தூங்கலாமா? கூடாதா? - விவரமா தெரிஞ்சுக்குங்க!
  9. லைஃப்ஸ்டைல்
    ஆழியில் கண்டெடுத்த அற்புத முத்து..! எங்க வீட்டு இளவரசி..!
  10. தமிழ்நாடு
    வாகனங்களில் ஸ்டிக்கர்களுக்கு தடை! விலக்கு அளிக்க வழக்கறிஞர்கள் சங்கம்...