/* */

சட்டவிரோதமாக மது விற்பனை: 2பேர் கைது -1527 மது பாட்டில்கள் பறிமுதல்

கோபிச்செடடிபாளையம் அருகே சட்டவிரோதமாக மதுவிற்பனை செய்த 2 பேரை போலீசார் கைது செய்தனர், 1527 மதுபாட்டில்களையும் பறிமுதல் செய்தனர்.

HIGHLIGHTS

சட்டவிரோதமாக மது விற்பனை: 2பேர் கைது -1527 மது பாட்டில்கள் பறிமுதல்
X

கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் இன்று முழு ஊரடங்கு அமல்படுதத்தப்பட்டுள்ளது. அதன்படி ஈரோடு மாவட்டத்திலுள்ள அத்தியாவசிய பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் தவிர்த்து தேனீர் கடைகள், உணவகங்கள், வணிக வளாகங்கள், மளிகைக் கடைகள், டாஸ்மாக் உள்ளிட்ட அனைத்து கடைகளும் மூடப்பட்டுள்ளன. சட்டவிரோத செயல்கள் மற்றும் ஊரடங்கை மீறுபவர்களை கண்காணிக்க காவல்துறையினர் ஆங்காங்கே தடுப்புகள் அமைத்தும் ரோந்து சென்றும் கண்காணித்து வருகின்றனர்.

இந்த நிலையில் ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே பங்களாபுதுார் லட்சுமிநகர் பாரதி வீதியில் சட்டவிரோதமாக மதுவிற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு சென்ற போலீசார் மறைத்து வைத்து மது விற்பனை செய்து கொண்டிருந்த ராஜா(எ)ராசு(51), பிரதாப்(30) ஆகியோரை கைது செய்தனர். மேலும் அவர்கள் பதுக்கி வைத்திருந்த180 ML அளவு கொண்ட 1396மதுபாட்டில்கள், 360 ML கொண்ட 51 மதுபாட்டில்கள் மற்றும் 80பீர் பாட்டில்கள் என மொத்தம் 1527 பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

கைது செய்யப்பட்ட இருவர் மீதும் வழக்குபதிவு செய்து சிறைக்காவலுக்கு அனுப்பினர். மேலும் பறிமுதல் செய்யப்பட்ட மதுபானங்களை கோபிசெட்டிபாளையம் மதுவிலக்கு போலீசாரிடம் ஒப்படைத்தனர் .

Updated On: 25 April 2021 11:37 AM GMT

Related News

Latest News

  1. குமாரபாளையம்
    குடும்ப வறுமையை பயன்படுத்தி சிறுநீரகம் விற்க மூளைச்சலவை..!
  2. சேலம்
    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 50 கன அடியாக அதிகரிப்பு
  3. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  4. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  5. ஈரோடு
    மதுரையில் நாளை வணிகர் தின மாநாடு: ஈரோட்டில் இருந்து 4,000 பேர்...
  6. கோவை மாநகர்
    பெண் காவலர்களை அவதூறாக பேசிய சவுக்கு சங்கர் கைது
  7. போளூர்
    தேசிய திறனறி தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு
  8. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  9. நாமக்கல்
    மோகனூர் சர்க்கரை ஆலையில் ஓய்வுபெற்ற அலுவலர்கள் முற்றுகை போராட்டம்
  10. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை: காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம்