/* */

கொடிவேரி அணையில் வெள்ளப்பெருக்கு: சுற்றுலா பயணிகளுக்கு தடை

கோபி அருகே கொடிவேரி அணையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால், சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

கொடிவேரி அணையில் வெள்ளப்பெருக்கு: சுற்றுலா பயணிகளுக்கு தடை
X

பவானிசாகர் அணை நீர்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களாக கன மழை பெய்து வருகிறது. இதனால் பவானிசாகர் அணை நீர் மட்டம் தொடர்ந்து அதிகரித்து 104 அடியை எட்டியது. இதன்காரணமாக அணையின் பாதுகாப்பு கருதி அணையில் இருந்து பவானி ஆற்றில் உபரிநீர் திறக்கப்பட்டு உள்ளது. இதனால் பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது.

இதேபோல் கொடிவேரி அணை பகுதியிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. வெள்ளப்பெருக்கு காரணமாக கொடிவேரி அணை பகுதி நேற்று மூடப்பட்டது. மேலும் அணை பகுதியில் சுற்றுலா பயணிகள் குளிக்கவும் தடை விதிக்கப்பட்டு உள்ளது. அதுமட்டுமின்றி கொடிவேரி அணை பகுதியில் பரிசல் இயக்கவும், சுற்றுலா பயணிகள் செல்பி எடுக்கவும், மீன்பிடித்தல், துணி துவைத்தல் போன்றவற்றுக்காக ஆற்றில் இறங்கவும் தடை விதிக்கப்பட்டு உள்ளது.

இதனிடையே, கொடிவேரி அணை பகுதியில், வருவாய்த்துறை சார்பில் தண்டோரா மூலமாக, வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது. மேலும் கொடிவேரி அணைக்கட்டு முகப்பு வாயிலில், தடுப்புகள் வைத்து பாதை அடைக்கப்பட்டுள்ளது.

Updated On: 9 Nov 2021 1:15 AM GMT

Related News

Latest News

  1. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்..!
  2. நாமக்கல்
    தமிழகத்தில் இயற்கை ரப்பர் விலை உயர்வால் டயர் ரீட்ரேடிங் கட்டணம் 15...
  3. நாமக்கல்
    முசிறி தனியார் வேளாண்மை கல்லூரி மாணவர்கள் கிராமத்தில் தங்கி...
  4. தேனி
    எதிர்கால வெப்பம் என்னை அச்சுறுத்துகிறது : ச.அன்வர்பாலசிங்கம் கவலை..!
  5. தேனி
    ரயில்வே ஸ்டேஷன் டூ வீடு, அதுவும் இலவசமாக...! ரயில்வேயின் புதிய...
  6. இந்தியா
    பிச்சையெடுத்த ஆசிரியை : கண்ணீர்விட்ட மாணவி..!
  7. வீடியோ
    🔴LIVE : சென்னையில் கோடை மழை || இந்திய வானிலை ஆய்வு மைய தென் மண்டல...
  8. தமிழ்நாடு
    அக்னி நட்சத்திரத்தில் இதையும் சிந்தியுங்கள்!
  9. தேனி
    வடமாநிலத்தவர் நமக்கு கற்றுத்தருவது என்ன?
  10. தென்காசி
    திமுக சார்பில் நீர் மோர் பந்தல் தொடங்கி வைத்த அமைச்சர் கே கே எஸ் எஸ்...