/* */

கோபி அருகே கார், மொபட் மோதிய விபத்தில் ஓய்வுபெற்ற போக்குவரத்து அதிகாரி பலி

கோபி அருகே கார், மொபட் மோதிய விபத்தில் ஓய்வுபெற்ற போக்குவரத்து அதிகாரி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

HIGHLIGHTS

கோபி அருகே கார், மொபட் மோதிய விபத்தில் ஓய்வுபெற்ற போக்குவரத்து அதிகாரி பலி
X

விபத்து ஏற்படுத்திய கார்.

ஈரோடு வீரப்பன்சத்திரம் எம்ஜிஆர் நகரை சேர்ந்தவர் ஜெகநாதன் (வயது 62). ஓய்வுபெற்ற போக்குவரத்து அதிகாரி. நேற்று ஜெகநாதன், கோபி அருகே கூகலூர் தாழைகொம்பு புதூரில் உள்ள அவருக்கு சொந்தமான விவசாய தோட்டத்திற்கு மொபட்டில் புறப்பட்டார். ஒத்த குதிரை அருகே உள்ள கூகலூர் பிரிவு அருகே திருப்ப முயன்றார்.


அப்போது அந்த வழியாக சேலம் மாவட்டம் சின்ன பள்ளப்பட்டியை சேர்ந்த சுந்தர் ராமன் என்பவர் காரை ஓட்டி வந்தார். எதிர்பாராதவிரதமாக காரும், மொபட்டும் மோதிக்கொண்டன. இந்த விபத்தில் தூக்கி வீசப்பட்ட ஜெகநாதன் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பலியானார். விபத்து குறித்து கோபி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Updated On: 25 Nov 2021 10:45 AM GMT

Related News

Latest News

  1. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  2. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  3. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  4. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  5. அரசியல்
    ராகுல் குறித்து கூறிய கருத்துக்கு ரஷ்ய செஸ் வீரர் கேரி காஸ்பரோவ்...
  6. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  7. பொன்னேரி
    ஸ்ரீ கரி கிருஷ்ணா பெருமாள் கோவிலின் தெப்பத் திருவிழா!
  8. திருத்தணி
    குடிதண்ணீர் வழங்காததை கண்டித்து கிராம மக்கள் சாலை மறியல்!
  9. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம்
  10. நாமக்கல்
    EVM அறைகளை கண்காணிக்க கூடுதலாக 10 சிசிடிவி கேமராக்கள்!