/* */

கோபி அருகே சூறாவளிக்காற்றுடன் மழை: 500 வாழை மரங்கள் சேதம்

கோபி அருகே கடந்த 2 நாட்களாாக சூறாவளிக்காற்றுடன் பெய்த கனமழையால் 500 வாழைகள் சேதமடைந்தன.

HIGHLIGHTS

கோபி அருகே உள்ள காசிபாளையத்தை சேர்ந்தவர் சாமிநாதன். விவசாயி. இவர் அதே பகுதியில் 3 ஏக்கர் மக்காசோளம், வாழை பயிரிட்டுள்ளார், மேலும் 1½ ஏக்கரில் நேந்திரம் வாழை சாகுபடி செய்திருந்தார்,.

இந்தநிலையில் கோபி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் கடந்த 2 நாட்களாக சூறாவளிக்காற்றுடன் பலத்த மழை பெய்தது. இந்த காற்றுக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் சாமிநாதன் தோட்டத்தில் இருந்த சுமார் 500-க்கும் மேற்பட்ட வாழைகள் முறிந்தும், சாய்ந்தும் நாசமானது.

இதுகுறித்து பாதிக்கப்பட்ட விவசாயி சாமிநாதன் கூறும்போது, கடந்த 13 மாதங்களாக வாழைகளை சாகுபடி செய்ய ரூ.1 லட்சம் வரை செலவு செய்து பராமரித்து வந்தேன். இன்னும் 15 நாட்களில் அறுவடை செய்யும் நிலைக்கு தார் வந்திருக்கும். ஆனால் திடீரென வீசிய சூறாவளிக்காற்றுக்கு வாழைகள் சாய்ந்துவிட்டன. முறையாக அறுவடை செய்திருந்தால் ரூ.3 லட்சம் வரை விற்றிருக்கும். இப்போது கடன்தான் மிஞ்சியிருக்கிறது என்று வேதனையடைந்தார்.

மேலும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தோட்டத்தை வந்து பார்த்து சேதங்களை ஆய்வு செய்து உரிய இழப்பீடு பெற்றுத்தரவேண்டும் என்று கோரிக்கையும் விடுத்துள்ளார்.

Updated On: 5 Oct 2021 10:05 AM GMT

Related News

Latest News

  1. அவினாசி
    பெங்களூரு ஸ்ரீ ஸ்ரீ குருகுல வேதாகம பாட சாலை மாணவா்களுக்கு பயிற்சி...
  2. திருப்பூர் மாநகர்
    திருப்பூரில் மழை பெய்ய வேண்டி இஸ்லாமிய மக்கள் சிறப்பு தொழுகை
  3. திருப்பூர்
    பல்லடம்; மருத்துவா்களுக்கான ‘மெடி அப்டேட்’கருத்தரங்கு
  4. திருவண்ணாமலை
    வெயிலின் தாக்கத்திலிருந்து தற்காத்துக் கொள்ள, ஆட்சியர் அறிவுரை
  5. திருவண்ணாமலை
    அருணாசலேஸ்வரா் கோவிலில் குவிந்த பக்தா்கள்
  6. திருவண்ணாமலை
    அண்ணாமலையார் கோயிலில் வரும் 4 ம் தேதி முதல் தாராபிஷேகம்
  7. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை; இன்றைய காய்கறி மற்றும் பழங்கள் விலை
  8. இந்தியா
    மே மாதம் எந்தெந்த நாட்கள், எந்தெந்த பகுதிகளில் வங்கி விடுமுறை என்று...
  9. லைஃப்ஸ்டைல்
    நோயின் அறிகுறிகளை முன்பே காட்டும் நகங்கள் பற்றி தெரிஞ்சுக்கலாமா?
  10. லைஃப்ஸ்டைல்
    தொட்டால் சிணுங்கி செடியில் இத்தனை ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?