/* */

கோபிச்செட்டிப்பாளையத்தில் நெல் வணிக வளாகம் திறப்பு

கோபிச்செட்டிப்பாளையத்தில், ரூ.22.35 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட நெல் வணிக வளாகத்தை, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி மூலமாக திறந்து வைத்தார்.

HIGHLIGHTS

கோபிச்செட்டிப்பாளையத்தில்  நெல் வணிக வளாகம் திறப்பு
X

 நெல் வணிக வளாகம்.

ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிப்பாளையம் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில், சுமார் 50 ஏக்கர் பரப்பளவில் ஆண்டு தோறும் இரு போக நெல் சாகுபடியிலும், மஞ்சள் போன்ற பணப்பயிர் உற்பத்தியிலும் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். விவசாயிகள் உற்பத்தி செய்யும் நெல் மற்றும் மஞ்சள் போன்ற விலை பொருட்கள், இருப்பு வைத்து விற்பனை செய்ய போதிய இடவசதி இல்லாத நிலை இருந்து வந்தது.
இதனையடுத்து கோபிச்செட்டிப்பாளையம் அருகே உள்ள நாதிபாளையத்தில் ரூ.22.35 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 5 ஆயிரம் மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட இரண்டு குடோன்களும் , 2 ஆயிரம் மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட ஒரு குடோன் என 12 ஆயிரம் மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட மொத்தம் 3 குடோன்களும் கடந்த 5 மாதங்களுக்கு முன்பு கட்டி முடிக்கப்பட்டது. கட்டி முடிக்கப்பட்டு பல மாதங்களாக திறக்காத நிலையில், இதுவரை திறப்பு விழா நடத்தப்படவில்லை.
இந்நிலையில், அப்பகுதியை சேர்ந்த விவசாயிகள் ஒருங்கிணைந்த நெல் வணிக வளாகத்தை திறக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். இதனையடுத்து, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், காணொளி காட்சி மூலமாக இன்று திறந்து வைத்தார். தொடர்ந்து ஒழுங்குமுறை விற்பனை கூட அதிகாரிகள் குத்து விளக்கு ஏற்றினர். தமிழக அளவில் 2-வது மிகப் பெரிய நெல் கொள்முதல் வணிக வளாகம் இது என்பது குறிப்பிடத்தக்கது.
Updated On: 16 Nov 2021 2:59 PM GMT

Related News

Latest News

  1. உடுமலைப்பேட்டை
    வனவிலங்குகளின் தாகம் தீர்க்க, வனப்பகுதி தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும்...
  2. பல்லடம்
    பல்லடம் பஸ் ஸ்டாண்டுக்குள் வெளியூா் பஸ்கள் வராததால் மக்கள் பாதிப்பு
  3. பல்லடம்
    ஊராட்சித் தலைவா்கள் கூட்டமைப்பு ஆலோசனைக்கூட்டம்
  4. தமிழ்நாடு
    10, 11, 12ம் வகுப்பு தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு
  5. லைஃப்ஸ்டைல்
    சிறந்த மகாபாரதம் தமிழ் மேற்கோள்கள்!
  6. வீடியோ
    81 வயது முதியவர் Modi-க்கு கொடுத்த பணம் | உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கிய...
  7. திருப்பூர்
    மழை வேண்டி பத்ரகாளியம்மன் கோவிலில் நவசண்டி ஹோமம்
  8. கல்வி
    ஞான விளைச்சலுக்கு விதை தூவிய ஆசிரியர்களை போற்றுவோம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    கற்றவுடன் ஞானம் தரும் திருக்குறள்..!
  10. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!