/* */

பங்களாபுதூர் அருகே மின்சாரம் தாக்கி வடமாநில வாலிபர் பலி

பங்களாபுதூர் அருகே மின்சாரம் தாக்கி வடமாநில வாலிபர் பலியான சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

HIGHLIGHTS

பங்களாபுதூர் அருகே மின்சாரம் தாக்கி வடமாநில வாலிபர் பலி
X

பங்களாபுதூர் காவல்நிலையம்.

ஈரோடு மாவட்டம் பங்களாப்புதூர் அருகேயுள்ள அண்ணாநகரில் ஈஸ்வரன் என்பவர் வீடு கட்டி வருகிறார். இங்கு வடமாநிலத்தைச் சேர்ந்த சுனில் (எ) புளுநாயக் (34) தனது மனைவி, குழந்தைகள் மற்றும் உறவினர்களுடன் தங்கி கட்டிடப் பணியில் ஈடுபட்டு வந்தார். இந்நிலையில், நேற்று மதியம் 2 மணியளவில் கட்டிடப் பணியின்போது முதல் மாடியில் இருந்த புளுநாயக்கிற்கு உடன் பணியாற்றும் சுக்ரீப் நாயக் என்பவர் சென்டரிங் கம்பியை எடுத்து மேலே கொடுத்துள்ளார்.


அப்போது எதிர்பாராத விதமாக அருகில் உள்ள மின்கம்பியில் சென்டரிங் கம்பி படுவதை கவனிக்காமல் கம்பியை வாங்கும்போது புளுநாயக் மீது மின்சாரம் தாக்கியது. இதில் அவர் முதல் மாடியில் இருந்து தவறி விழுந்துள்ளார். உடனே அருகில் இருந்தவர்கள் ஆம்புலன்ஸ் மூலம் புளுநாயக்கை தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்னர் கோபி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு புளுநாயக்கை பரிசோதித்த டாக்டர்கள் அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதை அடுத்து புளுநாயக் உடல் பிரேத பரிசோதனைக்காக கோபி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

Updated On: 30 Oct 2021 10:34 PM GMT

Related News

Latest News

  1. தேனி
    எதிர்கால வெப்பம் என்னை அச்சுறுத்துகிறது : ச.அன்வர்பாலசிங்கம் கவலை..!
  2. தேனி
    ரயில்வே ஸ்டேஷன் டூ வீடு, அதுவும் இலவசமாக...! ரயில்வேயின் புதிய...
  3. இந்தியா
    பிச்சையெடுத்த ஆசிரியை : கண்ணீர்விட்ட மாணவி..!
  4. வீடியோ
    🔴LIVE : சென்னையில் கோடை மழை || இந்திய வானிலை ஆய்வு மைய தென் மண்டல...
  5. தமிழ்நாடு
    அக்னி நட்சத்திரத்தில் இதையும் சிந்தியுங்கள்!
  6. தேனி
    வடமாநிலத்தவர் நமக்கு கற்றுத்தருவது என்ன?
  7. தென்காசி
    திமுக சார்பில் நீர் மோர் பந்தல் தொடங்கி வைத்த அமைச்சர் கே கே எஸ் எஸ்...
  8. கடையநல்லூர்
    தமிழகக் கேரள எல்லைப் பகுதியில் விளை நிலத்திற்குள் புகுந்த ஒற்றை காட்டு...
  9. கோவை மாநகர்
    சவுக்கு சங்கர் மீது 5 பிரிவுகளில் கோவை காவல் துறையினர் வழக்குப்பதிவு
  10. குமாரபாளையம்
    குடும்ப வறுமையை பயன்படுத்தி சிறுநீரகம் விற்க மூளைச்சலவை..!