/* */

கோபி அருகே உள்ள கொடிவேரி அணைக்கு சுற்றுலா பயணிகள் செல்ல தடை

கோபி அருகே உள்ள கொடிவேரி அணை நாளை மகாளய அமாவாசை காரணமாக சுற்றுலாபயணிகளுக்கு தடை விதித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்

HIGHLIGHTS

கோபி அருகே உள்ள கொடிவேரி அணைக்கு  சுற்றுலா பயணிகள் செல்ல  தடை
X

ஈரோடு மாவட்டம், கோபிச்செட்டிபாளையம் அருகேயுள்ல கொடிவேரி அணைக்கட்டு

ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிபாளையம் அருகே உள்ள கொடிவேரி அணை 550 ஆண்டுகளுக்கு முன்பு பவானி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட அணையாகும். சுமார் 15 அடி உயரத்திலிருந்து நீர் அருவி போல கொட்டுவதால் ஈரோடு மாவட்டம் மட்டுமின்றி கோவை ,திருப்பூர், கரூர் , சேலம் ,நாமக்கம் போன்ற பல மாவட்டங்களில் இருந்து நாள்தோறும் 10 ஆயிரம் சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம். கடந்த ஒன்றரை வருடமாக கொரோனா தொற்று பரவல் காரணமாக அணை மூடப்பட்டு சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இந்நிலையில் நேற்று மீண்டும் அணை திறக்கப்பட்டு சுற்றுலா பயணிகளுக்கு அனுமதிக்கப்பட்ட நிலையில் நாளை மகாளய அமாவாசை காரணமாக சுற்றுலா பயணிகளுக்கு தடை விதித்து மாவட்ட ஆட்சியர் கிருஷ்ணனுண்ணி உத்தரவிட்டுள்ளார்.

Updated On: 5 Oct 2021 5:00 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வாங்க டீ சாப்பிடலாம்..! அன்பின் உபசரிப்பு..!
  2. மயிலாடுதுறை
    என்ன படிக்கலாம்? எங்கு படிக்கலாம்? உயர்கல்வி வழிகாட்டும் நிகழ்ச்சி..!
  3. நாமக்கல்
    ப.வேலூரில் அதிமுக சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு: முன்னாள் அமைச்சர்...
  4. லைஃப்ஸ்டைல்
    தன்மானம் சீண்டப்பட்டால்...சிறுமுயலும் சிங்கமாகும்..!
  5. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  6. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  7. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  8. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  9. அரசியல்
    ராகுல் குறித்து கூறிய கருத்துக்கு ரஷ்ய செஸ் வீரர் கேரி காஸ்பரோவ்...
  10. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்