/* */

தடப்பள்ளி வாய்க்கால் சரி செய்யும் பணி தீவிரம்

தடப்பள்ளி வாய்க்கால் கரையில் ஏற்பட்ட உடைப்பை சரி செய்யும் பணியில் பொதுப்பணித் துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

HIGHLIGHTS

தடப்பள்ளி வாய்க்கால் சரி செய்யும் பணி தீவிரம்
X

தட்டப்பள்ளி வாய்க்காலை சரி செய்யும் பணியாளர்கள். 

கோபிசெட்டிபாளையம் அருகே தடப்பள்ளி வாய்க்கால் கரையில் ஏற்பட்ட உடைப்பை சரி செய்யும் பணியில் பொதுப்பணித் துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த 4 ம் தேதி இரவு கோபி மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் கன மழை பெய்தது. அதன் எதிரொலியாக கோபி வழியாகச் செல்லும் கீரிப்பள்ளம் ஓடையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, தடப்பள்ளி வாய்க்காலில் மழை நீர் மற்றும் கீழ்பவானி கசிவு நீர் சேர்ந்ததால் தண்ணீர் கரை புரண்டு ஓடியது. இதன் காரணமாக தடப்பள்ளி வாய்க்காலில் உடைப்பு ஏற்பட்டது.தற்போது பொதுப் பணித் துறையினர் போர்க் கால அடிப்படையில் உடைப்புப் பகுதிகளில் மணல் மூட்டைகளை அடுக்கி சரி செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும், வெள்ளத்தால் ஏற்பட்ட பயிர் சேதங்களை வேளாண்மைத்துறை அலுவலர்கள் கணக்கெடுத்து வருகின்றனர். இதுகுறித்து வேளாண்மை இணை இயக்குநர் சின்னசாமி கூறியதாவது: கரை உடைப்பு ஏற்பட்ட பகுதிகளில் சில நாற்றாங்கால் பகுதிகள் மட்டுமே பாதிக்கப்பட்டுள்ளது. நெல் நடவுப் பணிகள் இன்னும் துவங்கப்படாததால் பெருமளவு சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது என்றார்.

Updated On: 7 Nov 2021 4:15 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    புதுச்சேரி தேசிய தொழில்நுட்பக்கழகத்தின் புதிய இயக்குநர் பொறுப்பேற்பு
  2. கல்வி
    சென்னை சிப்பெட் வழங்கும் 3 ஆண்டு டிப்ளமோ படிப்புகள்: மாணவர் சேர்க்கை...
  3. லைஃப்ஸ்டைல்
    கஷ்டம் வரும்போது சிரிங்க..! துன்பம் தூசியாகும்..!
  4. கல்வி
    +2 க்கு பிறகு அடுத்தது என்ன? சாதித்து காட்டுவோம்!
  5. லைஃப்ஸ்டைல்
    அதிராமல் அதிரும் மின்னூட்டம், காதல்..!
  6. வீடியோ
    வள்ளுவனை உலக முழுவதும் எடுத்து சென்ற தலைவன் மோடி !! #modi #thirukkural...
  7. வீடியோ
    திருக்குறளை 100 மொழிகளில் மொழியாக்கம் செய்யும் Modi !#thirukural...
  8. வீடியோ
    Delhi-யில் இனிமே நம்ம தான் Annamalai Mass || #annamalai #delhi...
  9. வீடியோ
    ஊழலில் மிதக்கும் ஆம்ஆத்மிகிழித்து தொங்கவிட்ட...
  10. திருப்பூர்
    திருப்பூரில் புற்றுநோய் விழிப்புணா்வு சைக்கிள் பேரணி