Begin typing your search above and press return to search.
கோபி அருகே ஓட்டல் தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை
கோபிச்செட்டிப்பாளையம் அருகே ஓட்டல் தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
HIGHLIGHTS
கோபி அருகே உள்ள பச்சைமலை அடிவாரம் பகுதியை சேர்ந்தவர் மகேந்திரன் (வயது 41). ஓட்டல் தொழிலாளி. இவருக்கு ஜெயசீலி என்ற மனைவியும், ஒரு மகனும் உள்ளனர். இந்த நிலையில் மகேந்திரன் உடல்நிலை சரியில்லாமல் இருந்து வந்தார். இதற்காக அவர் பல்வேறு இடங்களில் சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் அவரது உடல்நிலை சரியாக வில்லை. இதனால் மனம் உடைந்து காணப்பட்ட மகேந்திரன் வீட்டில் உள்ள மின் விசிறியில் தூக்கு போட்டு கொண்டார். இதை கண்ட அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு கோபி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து கோபி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.