டி.என் பாளையத்தில் மின்னல் தாக்கி மாடு உயிரிழப்பு: வருவாய்த்துறை விசாரணை

ஈரோடு அருகே டி.என் பாளையத்தில் மின்னல் தாக்கி பசு மாடு ஒன்று பரிதாபமாக உயிரிழந்தது.

ஈரோடு மாவட்டம், டி.என்.பாளையம் அருகே உள்ள கொழிஞ்சிக்காடு பகுதியை சேர்ந்தவர் ராஜன் (50). கூலித்தொழிலாளியான இவர் 3 மாடுகள் வளர்த்து வருகிறார்.

இந்த நிலையில் நேற்று மதியம் அந்த பகுதியில் திடீரென இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. அப்போது மின்னல் தாக்கியதில் அவருடைய பசு மாடு ஒன்று பரிதாபமாக இறந்தது. இதுகுறித்து வருவாய்த்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

Tags

Next Story
ai ethics in healthcare