/* */

நம்பியூர் அருகே கோயில் வழிபாடு நடத்துவதில் இரு தரப்பினரிடையே மோதல்

நம்பியூர் அருகே கோயில் வழிபாடு நடத்துவதில் இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதலில் கதவை உடைத்து உள்ளே சென்றதால் பரபரப்பு

HIGHLIGHTS

நம்பியூர் அருகே கோயில் வழிபாடு நடத்துவதில் இரு தரப்பினரிடையே மோதல்
X

ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிபாளையம் நம்பியூர் கோயிலில் வழிபாடு தொடர்பாக இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதலை விசாரிக்கும் போலீஸார்

கோபிச்செட்டிபாளையம், நம்பியூர் அருகே உள்ள உணவகோவில் ஊராட்சிக்கு உட்பட்ட பெரிய செட்டியாபாளையம் பகுதியில் அய்யனார் கோவில் உள்ளது. இங்கு ஒவ்வொரு வருடம் வைகாசி மாதம் கிடாவெட்டு திருவிழா நடைபெற்று வந்தது.

கொரோனா தாக்கம் காரணமாக இரண்டு வருடமாக இந்த திருவிழா நடைபெறவில்லை. நடந்த 2014ம் ஆண்டு தனியார் ஒருவர் இக்கோவிலை சுற்றியுள்ள நிலத்தை வாங்கினார். கோவில் நடுவில் உள்ள 11 சென்ட் இடம் மட்டும் கோவிலுக்கு சொந்தமாக இருந்து வந்தது. இந்நிலையில், இன்று காலை அமாவாசையையொட்டி 100 குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் சாமி கும்பிட வந்தனர். ஆனால், கோவிலை சுற்றி நிலத்தை வாங்கியவர் கோவில் முன்பு இருந்த கேட்டை மூடினாராம். இதனால் ஆத்திரமடைந்த மக்கள், கேட்டை உடைத்து கோவிலுக்குள் சாமி கும்பிட சென்றனர். இதனால் நிலத்தை வாங்கிய தரப்பினர் அங்கு வந்ததால், இரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்படும் சூழ்நிலை உருவானது. தகவலறிந்த, வரப்பாளையம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, இரு தரப்பினரிடமும் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அங்கு பரபரப்பான சூழ்நிலை நிலவி வருகிறது.

Updated On: 5 Oct 2021 6:00 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வாழைத்தண்டுகளில் நிறைந்திருக்கும் மருத்துவ நன்மைகள் பற்றி தெரியுமா?
  2. லைஃப்ஸ்டைல்
    கணவன் மனைவி ஒற்றுமையை வலுப்படுத்த ஐந்து வழிகள் என்னென்ன தெரியுமா?
  3. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே கறி மசாலா பொடி தயாரிப்பது எப்படி?
  4. லைஃப்ஸ்டைல்
    சுவையான ரசப்பொடி, வீட்டிலேயே தயாரிப்பது எப்படி?
  5. லைஃப்ஸ்டைல்
    இரவில் தூக்கமின்றி தவிக்கிறீர்களா?
  6. அரசியல்
    காங்கிரஸுக்கு அவர்கள் ஆட்சியில் இருந்தால்தான் ஜனநாயகம்: பிரதமர்...
  7. லைஃப்ஸ்டைல்
    கவலையை விரட்ட நீங்க ரெடியா?
  8. கோவை மாநகர்
    பாரதியார் பல்கலை., பகுதியில் நாய்கள் தாக்கி 3 மான்கள் உயிரிழப்பு
  9. கோவை மாநகர்
    கோவை ரயில் நிலையம் முன் குளம் போல் தேங்கிய சாக்கடை நீர் ; பயணிகள்
  10. கோவை மாநகர்
    கோவையில் போதை மாத்திரைகளை விற்பனை செய்த கும்பல் கைது