/* */

சுதந்திர தினம்: ஈரோட்டில் டாஸ்மாக் கடைகள் மூட கலெக்டர் உத்தரவு

சுதந்திர தினத்தன்று ஈரோடு மாவட்டத்தில் அனைத்து டாஸ்மாக் கடைகளையும் மூட வேண்டும் என மாவட்ட கலெக்டர் கஉத்தரவிட்டுள்ளார்

HIGHLIGHTS

சுதந்திர தினம்: ஈரோட்டில் டாஸ்மாக் கடைகள் மூட கலெக்டர் உத்தரவு
X

இந்தியாவின் 75-ஆவது சுதந்திர தின விழா வரும் ஆகஸ்ட் 15-ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. சுதந்திர தினத்தை சீர்குலைக்கும் வகையில் தீவிரவாதிகள் நாச வேலையில் ஈடுபடக்கூடும் என்பதால், இந்தியா முழுவதும் போலீசார் பாதுகாப்பை தீவிரப்படுத்தியுள்ளனர். அதன்படி, ரயில் நிலையங்கள், பஸ் நிலையங்கள் என மக்கள் அதிகமாக கூடும் இடங்களில் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

ஈரோடு மாவட்டத்திலும் பாதுகாப்பு நடவடிக்கையாக போலீசார், பல்வேறு பகுதிகளில் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். இதேபோல் சுதந்திர தினத்தன்று "மது விற்பனை இல்லாத நாளாக" (Dry Day) அனுசரிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது.

அதன்படி, ஈரோடு மாவட்டத்தில் செயல்பட்டு வரும் அனைத்து அரசு மதுபானக்கடைகள் மூட வேண்டும் என மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி உத்தரவிட்டுள்ளார். மேலும் சுதந்திர தினத்தன்று மதுபான விற்பனைகள் ஏதும் நடைபெறாது என்றும், அன்றைய தினம் மது விற்பனையில் ஈடுபடும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளார்.

Updated On: 13 Aug 2021 1:30 PM GMT

Related News

Latest News

  1. அவினாசி
    சீரான முறையில் மும்முனை மின்சாரம் வழங்க விவசாயிகள் கலெக்டரிடம்...
  2. அவினாசி
    கல்லூரி மாணவர்களை பாதி வழியில் இறக்கிவிட்ட தனியார் பஸ்களை சிறைபிடித்த...
  3. திருப்பூர்
    12 டன் சின்ன வெங்காயத்தை கடத்திய லாரி டிரைவர் உள்ளிட்ட 2 பேர் கைது
  4. திருப்பூர் மாநகர்
    திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற பெண்ணால் பரபரப்பு
  5. காங்கேயம்
    இன்று முதல் போராட்டம்; வெள்ளகோவில் விவசாயிகள் முடிவு
  6. தமிழ்நாடு
    சென்னை உயர்நீதிமன்றத்துக்கு ஜூன் 2-ம் தேதி வரை கோடை விடுமுறை
  7. திருப்பூர் மாநகர்
    திருப்பூர் மாநகராட்சி மண்டல அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்களால்...
  8. திருப்பூர்
    வெயில் நேரத்தில் வெளியே போகாதீங்க; திருப்பூர் கலெக்டர் அட்வைஸ்!
  9. கீழ்பெண்ணாத்தூர்‎
    தண்ணீர் பந்தலை திறந்து வைத்த துணை சபாநாயகர்
  10. ஈரோடு
    ஈரோடு அரசு அருங்காட்சியகத்தில் தஞ்சாவூர் ஓவியக் கண்காட்சி