கோபி அருகே கூட்டுறவு வங்கி செயலாளர் நெஞ்சு வலியால் உயிரிழப்பு

X
பைல் படம்.
By - S.Gokulkrishnan, Reporter |19 Oct 2021 2:30 PM IST
கோபிச்செட்டிபாளையம் அருகே கூட்டுறவு வங்கி செயலாளர் நெஞ்சுவலியால் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியது.
ஈரோடு மாவட்டம், கோபி அருகே ரங்கம்மாள் வீதியை சேர்ந்தவர் முருகையன் வயது 51 புஞ்சை துறையம்பாளையம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி செயலராக பணியாற்றி வருகிறார்.
முருகையன் டி.என்.,பாளையம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க செயலாளர் வேலுசாமியுடன் பைக்கில், டி.ஜி., புதூர் அருகே நேற்று மாலை சென்றார்.
அப்போது முருகையனுக்கு நெஞ்சுவலி ஏற்பட்டது. சத்தியம்மங்கலம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்தார். இது குறித்து பங்களாப்புதூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Next Story
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu