/* */

கோபி அருகே அரசு பேருந்து - ஆட்டோ மோதி விபத்து: ஓட்டுனர் உயிரிழப்பு

கோபிசெட்டிபாளையம் அருகே அரசு பேருந்தும் பயணிகள் ஆட்டோவும் நேருக்குநேர் மோதியதில், ஆட்டோ டிரைவர் பலியானார்.

HIGHLIGHTS

கோபி அருகே அரசு பேருந்து - ஆட்டோ மோதி விபத்து: ஓட்டுனர் உயிரிழப்பு
X

பஸ் மீது மோதி, விபத்தில் சிக்கிய ஆட்டோ.

ஈரோடு மாவட்டம் கோபி அருகே உள்ள சூரியம்பாளையத்தில் அரசு பேருந்தும் ஆட்டோவும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் ஆட்டோ டிரைவர் சண்முகம் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

ஈரோட்டில் இருந்து கோபியை நோக்கி பயணிகளை ஏற்றிக்கொண்டு அரசு பேருந்து சென்று கொண்டு இருந்தது. அதே போல், கோபியில் இருந்து கவுந்தப்பாடி நோக்கி பயணிகள் ஆட்டோ சென்று கொண்டிருந்தது. பேருந்தும், ஆட்டோவும் சூரியம்பாளையம் என்ற இடத்தில் நேருக்குநேர் மோதிக் கொண்டன.

இந்த விபத்தில் ஆட்டோ டிரைவரான, கவுந்தப்பாடியை சேர்ந்த சண்முகம் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். விபத்து குறித்து கவுந்தப்பாடி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். சண்முகத்தின் உடலை மீட்டு கவுந்தப்பாடி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

Updated On: 23 Nov 2021 2:15 AM GMT

Related News

Latest News

  1. தேனி
    எதிர்கால வெப்பம் என்னை அச்சுறுத்துகிறது : ச.அன்வர்பாலசிங்கம் கவலை..!
  2. தேனி
    ரயில்வே ஸ்டேஷன் டூ வீடு, அதுவும் இலவசமாக...! ரயில்வேயின் புதிய...
  3. இந்தியா
    பிச்சையெடுத்த ஆசிரியை : கண்ணீர்விட்ட மாணவி..!
  4. வீடியோ
    🔴LIVE : சென்னையில் கோடை மழை || இந்திய வானிலை ஆய்வு மைய தென் மண்டல...
  5. தமிழ்நாடு
    அக்னி நட்சத்திரத்தில் இதையும் சிந்தியுங்கள்!
  6. தேனி
    வடமாநிலத்தவர் நமக்கு கற்றுத்தருவது என்ன?
  7. தென்காசி
    திமுக சார்பில் நீர் மோர் பந்தல் தொடங்கி வைத்த அமைச்சர் கே கே எஸ் எஸ்...
  8. கடையநல்லூர்
    தமிழகக் கேரள எல்லைப் பகுதியில் விளை நிலத்திற்குள் புகுந்த ஒற்றை காட்டு...
  9. கோவை மாநகர்
    சவுக்கு சங்கர் மீது 5 பிரிவுகளில் கோவை காவல் துறையினர் வழக்குப்பதிவு
  10. குமாரபாளையம்
    குடும்ப வறுமையை பயன்படுத்தி சிறுநீரகம் விற்க மூளைச்சலவை..!