/* */

ஈரோடு: 12 - 14 வயது சிறார்களுக்கு தடுப்பூசி போடும் பணி துவக்கம்

ஈரோடு மாவட்டத்தில் 12-14 வயதுடைய 66 ஆயிரத்து 300 சிறார்களுக்கு கோர்பேவேக்ஸ் தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கியது.

HIGHLIGHTS

ஈரோடு: 12 - 14 வயது சிறார்களுக்கு தடுப்பூசி போடும் பணி துவக்கம்
X

இன்று அந்தியூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 12-14 வயதுடைய சிறார்களுக்கு கோர்பேவேக்ஸ் தடுப்பூசி செலுத்தப்பட்ட போது எடுத்த படம்

தமிழகத்தில் 12 முதல் 14 வயது உடைய சிறார்களுக்கு, இன்று முதல் கோர்பேவேக்ஸ் தடுப்பூசியை செலுத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி ஈரோடு மாவட்டத்தில், 12 வயது முதல் 14 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு இன்று முதல் தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கியது. ஈரோடு மாவட்டத்தை பொறுத்தவரை 12 வயது முதல் 14 வயதுடைய சிறுவர்கள் மொத்தம் 66,300 பேர் உள்ளனர்.

இவர்களுக்கு அவர்கள் படிக்கும் பள்ளிகளிலேயே இன்று முதல், தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கியுள்ளது. இன்று முதல் தினமும் மாணவர்கள் படிக்கும் பள்ளியில் தடுப்பூசி கையிருப்பு தகுந்தார் போல் செலுத்தப்பட்டு வரும் என சுகாதாரத் துறையினர் தெரிவித்துள்ளனர். தடுப்பூசி செலுத்தப்பட்டு சிலமணி நேரம் அவர்கள் மருத்துவர்கள் கண்காணிப்பில் இருந்தனர். 28 நாட்களுக்கு பிறகு 2-வது தவணை தடுப்பூசி செலுத்தப்படும் என சுகாதாரத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Updated On: 16 March 2022 11:15 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வெற்றியை ஊக்குவிக்கும் "ஜெத்து".. மேற்கோள்களும் விளக்கங்களும்
  2. லைஃப்ஸ்டைல்
    வாழ்வின் வழிகாட்டி: தமிழ் ஞானப் பொக்கிஷங்கள்
  3. லைஃப்ஸ்டைல்
    கோபத்தின் விஷம்: சினத்தை அமைதிப்படுத்தும் தமிழ் வரிகள்
  4. ஆன்மீகம்
    கிரக பெயர்ச்சியால் கலக்கமா..? அப்ப இதை படிங்க..!
  5. வழிகாட்டி
    ஒரு வரலாற்று கலாசாரம் முடிவுக்கு வருகிறது..!
  6. சினிமா
    ஒரு கோடி ரூபாய் ராயல்டி பெற்றாரா மணிரத்தினம்..?
  7. ஈரோடு
    சித்தோடு அருகே 810 கிலோ தங்கம் ஏற்றிச் சென்ற வாகனம் கவிழ்ந்து விபத்து
  8. தேனி
    வீரபாண்டி கௌமாரியம்மன் திருவிழா இன்று தொடங்கியது..!
  9. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  10. இந்தியா
    சென்னையில் தரையிறங்கிய 8 பெங்களூர் விமானங்கள்