/* */

பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு: கொடிவேரி தடுப்பணை இன்று மூடல்

கொடிவேரி பகுதியில் நேற்றிரவு பெய்த கனமழையின் காரணமாக, பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் கொடிவேரி தடுப்பணை இன்று மூடப்பட்டது.

HIGHLIGHTS

பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு: கொடிவேரி தடுப்பணை இன்று மூடல்
X

கொடிவேரி தடுப்பணையில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டும் காட்சியை படத்தில் காணலாம்.

கொடிவேரி பகுதியில் நேற்றிரவு பெய்த கனமழையின் காரணமாக, பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் கொடிவேரி தடுப்பணை இன்று மூடப்பட்டது.

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள பவானி ஆற்றின் குறுக்கே கொடிவேரி தடுப்பணை கட்டப்பட்டுள்ளது. இந்த தடுப்பணையின் பாறைகளில் இருந்து அருவி போல் தண்ணீர் கொட்டுவதால், அதில் குளிப்பதற்கும், ரசிப்பதற்கும் நாள்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் தடுப்பணைக்கு வந்து செல்வது வழக்கம்.


இந்நிலையில், பவானி ஆற்றின் நீர் பிடிப்பு பகுதிகளான சத்தியமங்கலம், பவானிசாகர், கொடிவேரி உள்ளிட்ட பகுதியில் நேற்று இரவு முழுவதும் கனமழை பெய்ததால், கொடிவேரி தடுப்பணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால், தடுப்பணையில் இரு கரைகளையும் தொட்டப்படி தண்ணீர் பெருக்கெடுத்து ஆர்ப்பரித்து செல்கிறது. மேலும், தடுப்பணையில் பாதுகாப்பு கம்பியை தாண்டி தண்ணீர் வெளியேறுகிறது.

இதன் காரணமாக, இன்று (மே.23) வியாழக்கிழமை கொடிவேரி அணை மூடப்பட்டு சுற்றுலா பயணிகளுக்கும், பரிசல் இயக்கவும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் தடை விதித்துள்ளனர். இதனால், ஏமாற்றமடைந்த சுற்றுலாப் பயணிகள் கொடிவேரி தடுப்பணையில் இருந்து அருவி போல் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுவதை, அணையின் முன்பு உள்ள பாலத்தின் மீது நின்று பார்த்து செல்கின்றனர்.

Updated On: 23 May 2024 3:15 AM GMT

Related News

Latest News

  1. Trending Today News
    காற்றில் டைவ் அடித்த திமிங்கலம்..! வீடியோ வைரல்..! (செய்திக்குள்...
  2. கும்மிடிப்பூண்டி
    கும்மிடிப்பூண்டியில் யோகாசனம் செய்து நோவா உலக சாதனை
  3. ஈரோடு
    பவானி அருகே ஆம்னி காரில் கடத்தப்பட்ட ரேஷன் அரிசி பறிமுதல்: ஒருவர்
  4. நாமக்கல்
    நாமக்கல் வாரச்சந்தையில் ஒரே நாளில் ரூ.2 கோடிக்கு ஆடுகள் விற்பனை
  5. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் மண்டை ஓடுகளுடன் நிறுத்தப்பட்டிருந்த காரால்...
  6. ஈரோடு
    6 மாதத்தில் பிறந்த அரை கிலோ குழந்தை.. தீவிர சிகிச்சையில் 6 கிலோவாக...
  7. திருவள்ளூர்
    நிலத்தை தருவதாக ரூ.25 லட்சம் மோசடி: பாதிக்கப்பட்டவர் எஸ்.பி.,யிடம்...
  8. ஈரோடு
    திரைப்பட வசனத்தை மேற்கோள் காட்டி பேசிய மாவட்ட முதன்மை நீதிபதி
  9. ஆன்மீகம்
    வார ராசிபலன் 16 முதல் ஜூன் 2024 வரை அனைத்து ராசியினருக்கும்
  10. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்