அந்தியூரில் மதிமுகவின் 31ம் ஆண்டு தொடக்க விழா கொடியேற்றம்

அந்தியூரில் மதிமுகவின் 31ம் ஆண்டு தொடக்க விழா கொடியேற்றம்

Erode News- மதிமுகவின் 31ம் ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு, அந்தியூர் அருகே ந.முனியப்பம்பாளையத்தில் கட்சி கொடியேற்றப்பட்ட போது எடுத்த படம்.

Erode News- ஈரோடு மாவட்டம் அந்தியூரில் மதிமுகவின் 31ம் ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு, நீ.முனியப்பம்பாளையத்தில் கொடியேற்ற விழா நடைபெற்றது.

Erode News, Erode News Today- அந்தியூரில் மதிமுகவின் 31ம் ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு, ந.முனியப்பம்பாளையத்தில் கொடியேற்ற விழா நடைபெற்றது.

ஈரோடு கிழக்கு மாவட்டம் அந்தியூர் தெற்கு ஒன்றிய மதிமுக சார்பில் மதிமுகவின் 31ம் ஆண்டு தொடக்க விழா, கொடியேற்று விழா மற்றும் திருச்சி தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் துரை வைகோ வெற்றி விழா ஒன்றிய அவைத் தலைவர் வி.துரைசாமி தலைமையில் ந.முனியப்பம்பாளையத்தில் நடைபெற்றது. இந்த விழாவில் ஈரோடு கிழக்கு மாவட்ட செயலாளர் பெ.மு.குழந்தைவேலு, மாநில சட்டத்திருத்தக் குழு உறுப்பினர் கொடுமுடி சண்முகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மதிமுக மாநில இளைஞரணி செயலாளர் ப.த.ஆசைத்தம்பி கட்சிக் கொடியேற்றி சிறப்புரை ஆற்றினார்.

இந்நிகழ்வில், அந்தியூர் வடக்கு ஒன்றிய செயலாளர் உத்திரசாமி, அம்மாபேட்டை ஒன்றிய செயலாளர் தட்சிணாமூர்த்தி, ஈரோடு கிழக்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் சென்னிமலை ராஜ்குமார், மாணவரணி துணை அமைப்பாளர் க.சண்முகம், அந்தியூர் வடக்கு ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் பி.மோகன், அந்தியூர் தெற்கு ஒன்றிய நிர்வாகிகள் என்.ஏ.துரைசாமி, கீழ்வாணி சதாசிவம், என். பெருமாள், செல்வகாந்தி, சுமதி, ஆ.மாரசாமி, கிளைக் கழக செயலாளர் ரேவதி சண்முகம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இவ்விழாவிற்கான ஏற்பாட்டை அந்தியூர் தெற்கு ஒன்றிய செயலாளர் மா.இரகுபதி செய்திருந்தார்.

Tags

Next Story