ஈரோட்டில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் தேதி மாற்றம்

பைல் படம்.
ஈரோடு மாவட்டத்தில் ஒவ்வொரு மாதமும் கடைசி வெள்ளிக்கிழமை அன்று வேளாண் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடத்தப்படும். அதன்படி இந்த மாதத்திற்கான வேளாண் குறை தீர்க்கும் நாள் கூட்டம் இன்று (வெள்ளிக்கிழமை) நடப்பதாக இருந்தது. ஆனால் தற்போது ஈரோடு மாவட்டத்தில் உள்ள 10 தாலுகாவிலும் ஜமாபந்தி நடந்து வருகிறது.
ஈரோடு தாலுகாவில் நடக்கும் ஜமாபந்தியில் கலெக்டரும், பிற தாலு காக்களில் மாவட்ட வருவாய் அதிகாரி உள்ளி ட்ட உயர் அதிகாரிகள் பங்கேற்பது கட்டாய மாகிறது. இதனால் வேளாண் குறைதீர் நாள் கூட்டம் இன்று ஒத்திவைக்கப்பட்டு அதற்கு பதிலாக வரும் 30-ம் தேதி (செவ்வாய்க்கிழமை) காலை 10 மணிக்கு கலெக்டர் அலுவலக வளர்ச்சி மன்ற கூட்ட அரங்கில் கலெக்டர் ராஜ கோபால் சுன்கரா தலைமையில் நடக்க உள்ளது.
காலை 10 மணி முதல் 11.30 மணி வரை மனுக்கள் பெறுதலும், 11.30 மணி முதல், 12.30 மணி வரை விவசாய சங்க பிரதிநிதிகள் விவசாயம் தொடர்பாக தங்கள் பகுதி பிரச்சனைகள் குறித்து கருத்து தெரிவித்தலும், மதியம் 12.30 மணி முதல் 1.30 மணி வரை அலுவலர்கள் விள க்கம் அளித்தலும் நடக்க உள்ளது. விவசாயிகள் தங்களது பகுதி விவசாயம் சார்ந்த பிரச்சனைகளை மனுவாக வழங்கி தீர்வு பெறலாம் என அறிவு றுத்தப்பட்டுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu