/* */

கோபி அருகே விவசாயி விஷம் குடித்து தற்கொலை

நம்பியூர் அருகே உள்ள கருக்குபாளையம் புதூரை சேர்ந்த விவசாயி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக போலீசார் விசாரணை.

HIGHLIGHTS

கோபி அருகே விவசாயி விஷம் குடித்து தற்கொலை
X

பைல் படம்.

கோபிச்செட்டிப்பாளையம் அடுத்த நம்பியூர் அருகே உள்ள கருக்குபாளையம் புதூரை சேர்ந்தவர் பச்சியப்பன் (வயது 45) கூலி தொழிலாளி.‌ குடிப்பழக்கத்துக்கு அடிமையானவர் என கூறப்படுகிறது. இவரது மனைவி சுந்தராம்பாள். இந்நிலையில் பச்சையப்பன் குடும்பத்துடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 5-ம் தேதி மாலை 3 மணியளவில் தனது வீட்டின் அருகே உள்ள கீழ் தோட்டத்து பகுதியில் தென்னை மரத்திற்கு வைக்கப்பட்டிருந்த சல்பாஸ் மாத்திரை (விஷம்) சாப்பிட்டுவிட்டதாக தனது மனைவிடம் கூறியுள்ளார்.

இதனையடுத்து, பச்சையப்பன் கோபி தனியார் மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை பெற்று கொண்டு, கோவை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்நிலையில், சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார். இதுகுறித்து பச்சையப்பனின் தந்தை சென்னியப்பன் அளித்த புகாரின் பேரில் நம்பியூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 8 Dec 2021 10:00 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிவிப்புகளை...
  2. லைஃப்ஸ்டைல்
    வைட்டமின் ஈ காப்ஸ்யூல் பயன்படுத்த அழகு டிப்ஸ்!
  3. லைஃப்ஸ்டைல்
    நீங்கள் கண் சிமிட்டிக் கொண்டே இருக்கறீங்களா?
  4. லைஃப்ஸ்டைல்
    பிரியும் விடைக்கு ஏன் பிரியாவிடை..?
  5. வானிலை
    வானிலை முன்னறிவிப்பு: டெல்லி, உ.பி., ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில்...
  6. இந்தியா
    ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்: முடிவுக்கு வந்த போராட்டம், இயல்பு நிலை...
  7. லைஃப்ஸ்டைல்
    தண்ணீரை மென்று சாப்பிடு; சாப்பாட்டை குடி..!
  8. லைஃப்ஸ்டைல்
    சந்தோஷம் மின்னல் போல வந்து வந்து போகும்; அமைதி எப்போதுமே நிரந்தரமானது...
  9. கோவை மாநகர்
    கோவை நகரப் பகுதிகளில் மிதமான மழை ; மக்கள் மகிழ்ச்சி
  10. வீடியோ
    Savukku வழக்கில் மூன்று நாட்களில் நடந்தது என்ன? | அடுத்து என்ன...