Begin typing your search above and press return to search.
இரட்டை கொலை வழக்கில் தொடர்புடைய 5 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
ஈரோட்டில் நடைபெற்ற இரட்டை கொலை வழக்கில் தொடர்புடைய 5 பேர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க ஆட்சியர் கதிரவன் உத்தரவிட்டார்.
HIGHLIGHTS
ஈரோடு மாவடடத்தில் நடைபெற்று வரும் குற்ற சம்பவங்களை தடுக்கும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில், பிரபல ரவுடிகளான கலைச்செல்வன் , கணசேகரன் ஆகிய இருவரை கடந்த மாதம் பட்டப்பகலில் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் தொடர்புடைய 11 பேர் கைது செய்யப்பட்டனர். அதில் வேட்டை ரவி , பத்மநாபன் , மதன் , குட்டச்சாக்கு , அழகிரி ஆகியோர் 5 பேர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் தங்கதுரை மாவட்ட ஆட்சியரிடம் பரந்துரை செய்தார்.
அதன்படி இன்று மாவட்ட ஆட்சியர் கதிரவன் அவர்கள் 5 பேரையும் குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். இந்தாண்டு இதுவரை 11 நபர்கள் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது குறிப்பிடதக்கது.