/* */

செய்தியாளர்களுக்கு கொரோனா பரிசோதனை

ஈரோட்டில், வாக்கு எண்ணிக்கை மையத்திற்க்கு செல்லும் பத்திரிகையாளர்களுக்கு கொரோனா பரிசோதனை நடைபெற்றது.

HIGHLIGHTS

செய்தியாளர்களுக்கு கொரோனா பரிசோதனை
X

தமிழக சட்டமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள், மே 2 தேதி எண்ணப்படுகின்றன. வாக்கு எண்ணிக்கையின் போது வாக்கு மையத்திற்கு செல்லும் வேட்பாளர்கள், வேட்பாளர் முகவர்கள், பணியாளர்கள், ஊழியர்கள் மற்றும் செய்தியாளர்கள் என அனைவரும் கொரோனா பரிசோதனை கட்டாயம் செய்து கொள்ள வேண்டும் என்று, தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

அதன்படி, ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள கூட்டரங்கில், மாவட்ட ஆட்சியர் கதிரவன் உத்தரவின்பேரில் , பத்திரிகையாளர்களுக்கான கொரோனா சிறப்பு பரிசோதனை முகாம் நடைபெற்றது. இந்த முகாமில், பத்திரிக்கையாளர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் என சுமார் 150 பேர் பங்கேற்று, கொரானா பரிசோதனை செய்து கொண்டனர்.

இப்பரிசோதனையின் முடிவுகள், நாளை மாலைக்குள் தெரியவரும் என்றும், கொரோனா தொற்று அறிகுறி இல்லாதவர்கள் மட்டுமே வாக்கு எண்ணிக்கை மையத்திற்குள் அனுமதிக்கப்படுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Updated On: 29 April 2021 5:55 AM GMT

Related News

Latest News

  1. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  2. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  3. போளூர்
    ஜவ்வாது மலையில் பலாப்பழம் விளைச்சல் அமோகம்: விவசாயிகள் மகிழ்ச்சி!
  4. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  5. திருவண்ணாமலை
    எஸ் கே பி கல்வி குழுமத்தின் மாபெரும் ஓவியம், நடனம், திருக்குறள்,...
  6. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் தேவையற்ற புதைவட கேபிள்களை அகற்ற மனு
  7. குமாரபாளையம்
    பள்ளிபாளையத்தில் கனமழை: பிரதான சாலைகளில் சாய்ந்த இரு மரங்கள்
  8. லைஃப்ஸ்டைல்
    இல்லற வாழ்வில் நல்லறம் கண்ட தம்பதிக்கு வாழ்த்துகள்..!
  9. மேட்டுப்பாளையம்
    கோவில்பாளையம் பகுதியில் 2 கிலோ கஞ்சா சாக்லேட் பறிமுதல்..!
  10. தொழில்நுட்பம்
    சந்திரனில் முதல் ரயில் பாதை அமைக்க நாசா திட்டம்