/* */

வாக்கு எண்ணும் மைய பணியாளர்களுக்கான பணி ஒதுக்கீடு: கலெக்டர் துவக்கி வைத்தார்

வாக்கு எண்ணும் மையத்தில் பணிகளை மேற்கொள்பவர்களுக்கான பணி ஒதுக்கீட்டினை ஈரோடு கலெக்டர் கதிரவன் துவக்கி வைத்தார்.

HIGHLIGHTS

ஈரோடு மாவட்டத்தில் உள்ள ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு, மொடக்குறிச்சி, பெருந்துறை, பவானி, அந்தியூர் ஆகிய 6 சட்டமன்றத் தொகுதிகளுக்கான வாக்கு எண்ணும் மையமாக, சித்தோடு சாலைப் போக்குவரத்து பொறியியல் கல்லூரியும், கோபிச்செட்டிப்பாளையம் மற்றும் பவானிசாகர் சட்டமன்றத் தொகுதிகளுக்கான வாக்கு எண்ணும் மையமாக, கோபிச்செட்டிப்பாளையம் அரசு கலைக் கல்லூரியும் ஒதுக்கப்பட்டுள்ளது.

சட்டப்பேரவைத் தேர்தல் முடிவடைந்து, 8 சட்டமன்றத் தொகுதிகளிலும் பதிவான வாக்குகள் கொண்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனைத்தும் கொண்டு வரப்பட்டு, தொகுதிவாரியாக தனித்தனி பாதுகாப்பு இருப்பு அறைகளில் பத்திரப்படுத்தப்பட்டுள்ளன.

இந்நிலையில், வாக்கு எண்ணும் மையத்தில் பணிகளை மேற்கொள்ளும் நுண்பார்வையாளர்கள், மேற்பார்வையாளர்கள் மற்றும் உதவியாளர்களுக்கான பணி ஒதுக்கீட்டினை, இந்திய தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தின் மூலம் கணிணி சுழற்சி முறையில் மாவட்ட கலெக்டர் கதிரவன், இன்று துவக்கி வைத்தார்.

Updated On: 23 April 2021 6:11 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    நல்லெண்ணெய்ய இப்படி யூஸ் பண்ணா முகம் சும்மா ஜொலிஜொலி..!
  2. சிவகாசி
    காரியாபட்டி அருகே, சீலக்காரி அம்மன் ஆலய மகா கும்பாபிஷேகம்..!
  3. லைஃப்ஸ்டைல்
    உலகில் எந்தெந்த நாட்டு காவல்துறைக்கு காக்கி யூனிஃபார்ம் தெரியுமா?
  4. உசிலம்பட்டி
    உசிலம்பட்டி அருகே, பலத்த மழையால், விலை போகாத வெள்ளரிக்காய்..!
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பு நிறைந்த வாழ்க்கைத் துணைவர்களுக்கு திருமணநாள் வாழ்த்துகள்..!
  6. திருமங்கலம்
    ஆபத்தை உணராமல் வைகை ஆற்றில் குளியல் : மாவட்ட நிர்வாகம் கண்டு
  7. அண்ணா நகர்
    சென்னையில் ஜாபர் சாதிக் மனைவியிடம் அமலாக்க துறை அதிகாரிகள் நேரடி...
  8. லைஃப்ஸ்டைல்
    சமையல் அறையில் கை 'சுட்டதா'? என்ன செய்வது?
  9. உலகம்
    உலகின் கடைசி நகரம் எது தெரியுமா?
  10. தமிழ்நாடு
    வேளாண் துறையில் ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் எண்ணிக்கை 7 ஆயிரமாக உயர்வு