/* */

ஈரோடு மாவட்டத்திற்கு கூடுதலாக 3 டன் ஆக்சிஜன் பெற நடவடிக்கை கலெக்டர் தகவல்

ஈரோடு மாவட்டத்திற்கு கூடுதலாக 3 டன் ஆக்சிஜன் பெற நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் கதிரவன் தெரிவித்துள்ளார்.

HIGHLIGHTS

ஈரோடு மாவட்டத்திற்கு கூடுதலாக 3 டன் ஆக்சிஜன் பெற நடவடிக்கை கலெக்டர் தகவல்
X

ஈரோடு மாவட்டத்தில் ஆக்சிஜன் தட்டுப்பாடு இல்லாமல் தேவையானவர்களுக்கு கிடைக்கச்செய்வதற்கான முன்னேற்பாடுகள் குறித்த ஆலோசனை கூட்டம் கலெக்டர் கதிரவன் தலைமையில் நடைபெற்றது.கூட்டத்தில் கலெக்டர் கதிரவன் பேசியதாவது,

ஈரோடு மாவட்டத்துக்கு தேவையான ஆக்சிஜன் இருப்பில் இருக்கும்படி பார்த்துக்கொள்ள வேண்டும். எந்த வகையிலும் தட்டுப்பாடு ஏற்படாத வகையில், ஆக்சிஜன் சேமிப்பு கிடங்கில் இருக்க வேண்டும்.

இதற்கான அழுத்தத்தை மத்திய, மாநில அரசுகளுக்கு கொடுக்க வேண்டும். திரவ ஆக்சிஜன் சேமிப்பு கிடங்குகள் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் அதை சேமித்து வைத்துக்கொள்ள வேண்டும். வாயு ஆக்சிஜனை விட, திரவ ஆக்சிஜன் நல்லது. இதுபோல் தற்போது எங்கெல்லாம் ஆக்சிஜன் இருப்பில் உள்ளது என்பதையும் கணக்கெடுத்து வைத்துக்கொள்ள வேண்டும்.

தீயணைப்பு படையினர் தனியார் மருத்துவமனை பட்டியல் பெற்று ஆக்சிஜன் சேமிப்பு பகுதிகளில் தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். ஈரோடு மாவட்டத்துக்கு கூடுதலா 3 டன் திரவ ஆக்சிஜன் கேட்டுப்பெற நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு கலெக்டர் கதிரவன் கூறினார்.

Updated On: 6 May 2021 5:00 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ‘இன்று போல் என்றும் வாழ்க’ - 25வது திருமண ஆண்டு வாழ்த்துகள்
  2. லைஃப்ஸ்டைல்
    அண்ணா அண்ணிக்கு அன்பு நிறைந்த திருமண நாள் வாழ்த்துகள்...!
  3. ஆன்மீகம்
    தமிழில் நட்சத்திர பிறந்த நாள் வாழ்த்துகளை சொல்வோம்!
  4. ஆன்மீகம்
    ஈகைப் பெருநாளின் சிறப்புகளும் வாழ்த்து மொழிகளும்
  5. அரசியல்
    பாஜகவுடன் சேர்வது தற்கொலைக்கு சமம் என்ற தினகரன் இப்ப ஏன் கூட்டணி...
  6. மாதவரம்
    சோழவரம் ஒன்றியத்தில் தண்ணீர் பந்தல் திறந்து வைத்த சுதர்சனம் எம்எல்ஏ
  7. திருவள்ளூர்
    தண்ணீர் தேடி வந்த புள்ளிமான் நாய்கள் கடித்ததில் படுகாயம்
  8. வீடியோ
    அப்பா அம்மா ரெண்டுபேருமே படிக்கல |உணர்ச்சிபொங்க சொன்ன மாணவி!உருகி...
  9. லைஃப்ஸ்டைல்
    மனைவியின் பிறந்தநாள்: அன்பையும் மதிப்பையும் காட்ட சிறந்த சந்தர்ப்பம்
  10. தமிழ்நாடு
    நாட்டாமைக்கு பா.ஜ.க.,வில் புதிய பதவி?