/* */

விவசாயிகளுடன் புகுந்த சமூக விரோதிகள் -ஜிகே வாசன்

விவசாயிகளுடன் புகுந்த சமூக விரோதிகள் -ஜிகே வாசன்
X

டெல்லியில் போராடும் விவசாயிகளுடன் சமூகவிரோத கும்பல் உள்ளே புகுந்து விட்டதாக ஈரோட்டில் ஜிகே வாசன் கூறினார்.

பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள ஈரோடு வருகை தந்த தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜிகே வாசன் முன்னதாக செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், வேளாண் சட்டங்கள் குறித்து விவசாயிகளுடன் பல முறை மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்தியும் சுமூக உறவு ஏற்படவில்லை என்றும் சிலர் தவறான வழியில் விவசாயிகளை வழி நடத்தும் காரணத்தால் கோடிக்கணக்கான விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்படும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாகவும் கூறினார்.

மேலும் டெல்லியில் நேற்று நடைபெற்ற சம்பவம் துரதிர்ஷ்டவசமானது என்று தெரிவித்த வாசன் , அப்பாவி விவசாயிகளுடன் சமூக விரோத கும்பல் உள்ளே புகுந்து குடியரசு தினம் மற்றும் நாட்டிற்கு அவப்பெயரை ஏற்படுத்தியுள்ளதாகவும் , இந்த சம்பவம் கண்டிக்கத்தக்கது என்றார். எதிர்கட்சிகள் ஆக்கப்பூர்வமாக செயல்பட வேண்டும் என்ற அவர் , தேர்தலுக்காக நாடக அரசியலை செய்யக்கூடாது என்றார்.

Updated On: 27 Jan 2021 7:15 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    உழைக்கும் தோழர்களுக்கு ஒரு சல்யூட்..!
  2. லைஃப்ஸ்டைல்
    ஒருபோதும் தன்னை நிரூபிக்க வேண்டியதில்லை. அதன் இருப்பு போதும்! அது தான்...
  3. தமிழ்நாடு
    புதுச்சேரி தேசிய தொழில்நுட்பக்கழகத்தின் புதிய இயக்குநர் பொறுப்பேற்பு
  4. கல்வி
    சென்னை சிப்பெட் வழங்கும் 3 ஆண்டு டிப்ளமோ படிப்புகள்: மாணவர் சேர்க்கை...
  5. லைஃப்ஸ்டைல்
    கஷ்டம் வரும்போது சிரிங்க..! துன்பம் தூசியாகும்..!
  6. வீடியோ
    Adani துறைமுகத்துல போதைப்பொருள் இருந்துச்சு என்ன நடவடிக்கை எடுத்தாங்க...
  7. கல்வி
    +2 க்கு பிறகு அடுத்தது என்ன? சாதித்து காட்டுவோம்!
  8. லைஃப்ஸ்டைல்
    அதிராமல் அதிரும் மின்னூட்டம், காதல்..!
  9. வீடியோ
    வள்ளுவனை உலக முழுவதும் எடுத்து சென்ற தலைவன் மோடி !! #modi #thirukkural...
  10. வீடியோ
    திருக்குறளை 100 மொழிகளில் மொழியாக்கம் செய்யும் Modi !#thirukural...