/* */

ஈரோடு தெற்கு மாவட்ட திமுக சார்பில் பாராவாலி போட்டி

ஈரோடு தெற்கு மாவட்ட திமுக சார்பில், பாராவாலி போட்டியை அமைச்சர் முத்துசாமி தொடங்கி வைத்தார்.

HIGHLIGHTS

ஈரோடு தெற்கு மாவட்ட திமுக சார்பில் பாராவாலி போட்டி
X
பாராவாலி போட்டியை துவக்கி வைத்த அமைச்சர் முத்துசாமி.

ஈரோடு தெற்கு மாவட்ட திமுக சார்பில், தமிழ்நாடு பாராவாலி சங்கம் (மாற்றுத்திறனாளி வாலிபால்) சார்பில், ஈரோடு கலை அறிவியல் கல்லூரியில், உதயநிதி டிராபி 2023க்கான 2 நாள் மாநில அளவிலான பாராவாலி போட்டியை அமைச்சர் முத்துசாமி தொடங்கி வைத்தார்.

அமைச்சர் தனது உரையில், வீரர்களுக்கு உரிய உதவி செய்வதாக உறுதியளித்ததோடு, ஈரோடு சிஎன் கல்லூரியை அரசு கையகப்படுத்தியதால், அனைத்து வசதிகளுடன் கூடிய மெகா உள்விளையாட்டு அரங்கம்‌ உருவாக்க அரசு திட்டமிட்டுள்ளதாக தெரிவித்தார். தமிழ்நாடு பாராவாலி சங்கத்தின் மாநில தலைவர் மக்கள் ராஜன் கூறியதாவது, ஆகஸ்ட் மாதம் நடைபெறும் தென் மண்டல பாராவாலி போட்டியில் பங்கேற்பதற்கு சிறந்த வீரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

இப்போட்டியில் 8 ஆண்கள் மற்றும் 4 பெண்கள் அணிகள் பங்கேற்றுள்ளன. அடுத்த ஆண்டு பாரிஸில் நடைபெறவுள்ள பாரா ஒலிம்பிக் போட்டியில் இந்திய அணி நுழைய தற்போதைய நிகழ்வு உதவும் என தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில், துணை மேயர் செல்வராஜ், கல்லூரி இயக்குனர் வெங்கடாசலம் உட்பட பலர் கலந்து கொண்டனர்

Updated On: 29 May 2023 1:00 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    என் இதய மாளிகையின் ராணி..! என்னை ஆட்சிபுரிபவள்..!
  2. பட்டுக்கோட்டை
    வேளாண் தொழில்நுட்பங்களை பயன்படுத்துங்க..! ஜோரான மகசூலை அள்ளுங்க..!
  3. குமாரபாளையம்
    ஆம்புலன்ஸ் ஓட்டுனர்களுக்கு பாராட்டு..!
  4. குமாரபாளையம்
    பணி நிறைவு பெறும் ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா!
  5. வீடியோ
    மத்திய அரசின் ஐடி பாதுகாப்பு சட்டம் | இந்தியாவில் Whatsapp சேவை...
  6. குமாரபாளையம்
    கிணற்றில் விழுந்த பசுவை மீட்ட தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர்!
  7. காஞ்சிபுரம்
    பாரதியார் உண்டு உறைவிட பள்ளி மாணவிகளுக்கு பட்டமளிப்பு விழா..!
  8. காஞ்சிபுரம்
    மருத்துவ மாணவர்களுக்கு புற்று நோயியல் கல்வி மற்றும் விழிப்புணர்வு...
  9. லைஃப்ஸ்டைல்
    நீ சென்ற பாதைநோக்கிய பயணத்தில் இருக்கிறேன் நான்..!
  10. சினிமா
    யாரிந்த அக்ஷய் கமல்..? 'குக் வித் கோமாளி' சீசன் 5 போட்டியாளர்..!