Erode Power Shutdown | ஈரோடு மாநகர் முழுவதும் நாளை மின் நிறுத்தம்

Erode Power Shutdown | ஈரோடு மாநகர் முழுவதும் நாளை  மின் நிறுத்தம்
X

மின்தடை (பைல் படம்).

ஈரோடு மாவட்டம் ஈரோடு துணை மின் நிலையத்தில் நாளை (வெள்ளிக்கிழமை) மின்தடை செய்யப்படும் என்று மின்வாரியம் அறிவித்துள்ளது.

ஈரோடு மாவட்டம் ஈரோடு துணை மின் நிலையத்தில் நாளை (வெள்ளிக்கிழமை) மின்தடை செய்யப்படும் என்று, மின்வாரியம் அறிவித்துள்ளது.

ஈரோடு மாவட்டம், ஈரோடு துணை மின் நிலையத்தில் நாளை (நவம்பர் 23) வெள்ளிக்கிழமை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. ஆகையால் இந்த பகுதிகளில், நாளை மின் தடை ஏற்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, நாளை மின்வாரியம் சார்பில், மின் கம்பங்கள், மின்மாற்றிகளில் உள்ள பழுது மற்றும் செடி கொடிகளை அகற்றும் பணி நடக்க இருக்கிறது. மேலும், இதை சரிசெய்து பின்னர் சீரான மின் விநியோகம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட இருக்கிறது.

இதனால், நாளை பொதுமக்கள் மின் தேவை இருப்பின் மாற்று ஏற்பாடுகளை செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அத்துடன், மின்வாரிய ஊழியர்களுக்கு சிரமம் கொடுக்காமல் உங்கள் பணிகளை செய்யுமாறும், அவர்களுக்கு நல் ஒத்துழைப்பு தருமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

ஈரோடு துணை மின் நிலையம் (காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை):-

மின்விநியோகம் தடை செய்யப்படும் பகுதிகள்:- ஈரோடு நகர் முழுவதும், வீரப்பன்சத்திரம், இடையங்காட்டுவலசு, முனிசிபல் காலனி, ஆசிரியர் காலனி, பெருந்துறை சாலை, சம்பத் நகர், வெட்டுக்காட்டுவலசு, மாணிக்கம் பாளையம், பாண்டியன்நகர், சக்தி நகர், வக்கீல் தோட்டம், பெரியவலசு, பாப்பாத்திகாடு, பாரதிதாசன் வீதி, முனியப்பன் கோயில் வீதி, நாராயணவலசு, டவர் லைன் காலனி, திருமால் நகர், கருங்கல்பாளையம், கேஎன்கேசாலை, மூலப்பட்டறை, சத்தி சாலை, நேதாஜி சாலை, காந்திஜி சாலை, பெரியார் நகர், ஈவிஎன் சாலை மற்றும் மேட்டூர் சாலை ஆகிய பகுதிகளில் மின்சாரம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story
ai in future agriculture