ஈரோடு இடைத்தேர்தல்; 5 நாட்களில் 46 பேர் வேட்பு மனுத்தாக்கல்

ஈரோடு இடைத்தேர்தல்; 5 நாட்களில் 46 பேர் வேட்பு மனுத்தாக்கல்
X

Erode news, Erode news today-- ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல் ( வரைபடம்)

Erode news, Erode news today- ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட, 5-வது நாளான இன்று 10 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.

Erode news, Erode news today--ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல் வருகிற 27-ம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த மாதம் 31-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. ஈரோடு மாநகராட்சி அலுவலகத்தில், வேட்பாளர்கள் காலை 11 மணி முதல் மதியம் 3 மணி வரை வேட்பு மனு தாக்கல் செய்து வருகின்றனர்.

முதல் நாளில் சுயேட்சைகள் 4 பேர் ஆர்வத்துடன் வேட்பு மனுத்தாக்கல் செய்தனர். 2-வது நாள் வேட்பு மனுத்தாக்கலில், தேமுதிக வேட்பாளர் ஆனந்த் உள்பட 6 பேரின் வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டது. இதனையடுத்து, நேற்று முன்தினம் 3-வது நாளாக நடந்த வேட்பு மனு தாக்கலில், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மேனகா நவநீதன் உள்பட 10 பேரின் வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டன.

நேற்று 4-வது நாளாக திமுக கூட்டணி கட்சி காங்கிரஸ் வேட்பாளர் இளங்கோவன், அமமுக வேட்பாளர் சிவபிரசாந்த், ஓ.பன்னீர் செல்வம் அணி வேட்பாளர் செந்தில் முருகன் மற்றும் சுயேட்சைகள் உள்பட நேற்று ஒரே நாளில் அதிகபட்சமாக 16 பேர் வேட்பு மனு தாக்கல் செய்தனர். கடந்த 4 நாட்களாக நடந்த வேட்பு மனு தாக்கலில், மொத்தம் 36 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்.

இந்நிலையில், இன்று 5 நாளாக வேட்புமனு தாக்கல் 3 மணியுடன் நிறைவடைந்த நிலையில், இடைத்தேர்தலில் போட்டியிட 10 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். இதுவரை ஐந்து நாட்களில், மொத்தம் 46 பேர் ஈரோடு இடைத்தேர்தலில் போட்டியிட, வேட்பு மனுத் தாக்கல் செய்துள்ளனர்.

Tags

Next Story
AI மூலம் சிறிய முதலீட்டில் பெரிய வணிகம் தொடங்க முடியும் - தமிழ்நாட்டில் எங்கும் சாத்தியம்!