ஈரோடு இடைத்தேர்தலை; 238 வாக்குச்சாவடி மையங்களில் 1,206 அலுவலர் நியமனம்

ஈரோடு இடைத்தேர்தலை; 238 வாக்குச்சாவடி மையங்களில் 1,206 அலுவலர் நியமனம்
X

Erode news, Erode news today-- இடைத்தேர்தல் பணியில் ஈடுபடும் அலுவலர்களுக்கு, கணினி சுழற்சி முறையில் இறுதி கட்டப்பணி ஒதுக்கீடு செய்யும் பணியினை மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான கிருஷ்ணனுண்ணி மற்றும் தேர்தல் பொது பார்வையாளர் ராஜ்குமார் யாதவ் ஆகியோர் துவங்கி வைத்தனர்.

Erode news, Erode news today-ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலத்தில், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பணியில் ஈடுபடும் அலுவலர்களுக்கு, கணினி சுழற்சி முறையில் இறுதி கட்டப்பணி ஒதுக்கீடு செய்யும் பணி நடந்தது.

Erode news, Erode news today-- ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலத்தில் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பணியில் ஈடுபடும் அலுவலர்களுக்கு, கணினி சுழற்சி முறையில் இறுதி கட்டப்பணி ஒதுக்கீடு செய்யும் பணியினை மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான கிருஷ்ணனுண்ணி மற்றும் தேர்தல் பொது பார்வையாளர் ராஜ்குமார் யாதவ் ஆகியோர் துவங்கி வைத்தனர்.

இதில் கலெக்டர் கிருஷ்ணனுண்ணி, தேர்தல் பொதுபார்வையாளர் ராஜ்குமார் யாதவ் ஆகியோர் கூறியதாவது,

ஈரோடு மாவட்டத்தில் நாளை (பிப்.27) ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. அதனைத் தொடர்ந்து, ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி்யில் 238 வாக்குசாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் வாக்குச்சாவடி மையங்கள் அல்லாமல் 20 சதவீதம், அதாவது 48 வாக்குச் சாவடி கூடுதல் மையங்கள் (ரிசர்வ்) பகுதிகளாக என 286 வாக்குச்சாவடி மையங்கள் உள்ளது.

அதன்படி தேர்தல் நாளில் பணியாற்ற ஒவ்வொரு வாக்குச் சாவடிகளிலும் தலா ஒரு முதன்மை அலுவலர் மற்றும் 3 நிலைகளிலான வாக்குச்சாவடி அலுவலர்கள் என மொத்தம் 4 அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அதன்படி, தொகுதியில் 238 வாக்குச் சாவடிமையங்களுக்கு 286 முதன்மை அலுவலர்களும், 858 மூன்று நிலைகளிலான வாக்குச்சாவடி அலுவலர்கள் மற்றும் 1200 வாக்காளர்களுக்குமேல் உள்ள வாக்குச்சாவடிகளில் பணிபுரிய 62 அலுவலர்களுக்கும் கணினி மூலம் சுழற்சி முறையில் இறுதிகட்ட பணி ஒதுக்கீடு செய்யும் பணி தொடக்கப்பட்டது.

முதல் கட்ட கணினி சுழற்சி முறையில் தோ்ந்தெடுக்கப்பட்ட அலுவலர்களுக்கு அவர்களது துறைசார்ந்த முதன்மை அலுவலர்கள் மூலம் வாக்குச் சாவடி மையங்களில் பணிபுரிவதற்கான ஆணைகள் வழங்கினர். மேலும், அலுவலர்களுக்கு வாக்குச்சாவடிகளில் பணியாற்றுவது குறித்து 2 கட்டப் பயிற்சி முகாம் நடைபெற்றது. பணியமர்த்தப்பட்ட அலுவலர்கள் தங்களுக்கு வழங்கப்பட்ட ஆணையுடன் அவர்களுக்கு பணிபுரிய ஒதுக்கீடு செய்யப்பட்ட வாக்குச்சாவடி மையங்களுக்கு செல்ல உள்ளார்கள், என்றார்.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் சந்தோஷினி சந்திரா, உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் முத்துக்கிருஷ்ணன், தோ்தல் வட்டாட்சியர் சிவகாமி, கணினி நிரலாளர் வெங்கடேஷ் உட்பட அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story