/* */

கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள குவியும் மக்கள்

கொரோனா முதல் மற்றும் 2-ம் டோஸ் தடுப்பூசி போட்டுக் கொள்ள ஈரோடு அரசு மருத்துவமனையில் பொதுமக்கள் குவிந்தனர்.

HIGHLIGHTS

கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள குவியும் மக்கள்
X

கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் கோவேக்சின், கோவிஷில்டு தடுப்பூசி பயன்பாட்டிற்க்கு வந்துள்ளன. முதற்கட்டமாக முன் களப்பணியாளர்களான அரசு தனியார், மருத்துவமனையில் பணிபுரியும் டாக்டர்கள், செவிலியர்கள் ஊழியர்கள் சுகாதாரப் பணியாளர்கள், போலீஸ் உயர் அதிகாரிகளுக்கு போடப்பட்டது. ஈரோடு மாவட்டத்தில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட முன்கள பணியாளர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டது. அதைத்தொடர்ந்து கடந்த மார்ச் மாதம் 1ஆம் தேதி முதல் 80 மேற்பட்ட முதியவர்கள், 45 வயது முதல் 59 வயது வரை உள்ள இணை நோயால் பாதித்தவர்களுக்கு தடுப்பூசி அனைத்து அரசு ஆஸ்பத்திரிகளிலும், ஆரம்ப சுகாதார நிலையங்களிலும், தனியார் ஆஸ்பத்திரியிலும் போடப்பட்டு வந்தது. இதைத் தொடர்ந்து கடந்த ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் 45 வயதுக்கு மேற்பட்ட அனைத்து பொதுமக்களுக்கும் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.

அரசு, ஆரம்ப சுகாதார மையங்களில் இலவசமாகவும், தனியார் ஆஸ்பத்திரியில் கட்டணம் வசூலித்து தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை 1 லட்சத்து 22 ஆயிரத்து 591 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. முதல் தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள் இரண்டாம் தடுப்பூசியும் போட்டுக் வருகின்றனர்.

ஈரோடு அரசு தலைமை மருத்துவமனையில் தினமும் 300 முதல் 400 பேருக்கு கொரோனா தடுப்பூசி முதல் டோசும்,இரண்டாம் டோசும் போடப்பட்டு வருகிறது. தடுப்பூசி போட்டுக்கொள்ள விரும்பும் பொதுமக்கள் முன்பதிவு செய்து டோக்கன் அடிப்படையில் காலையிலே நீண்ட வரிசையில் சமூக இடைவெளி கடைபிடித்து தடுப்பூசி போட்டு செல்கின்றனர். ஈரோடு அரசு மருத்துவமனையில் இன்று காலை முதலே பொதுமக்கள் நீண்ட வரிசையில் ஆர்வத்துடன் வந்து தடுப்பூசி போட்டு வருகின்றனர். கோவேக்சின், கோவிஷில்டு இரண்டு தடுப்பூசியும் போடபட்டு வருவதாக ஈரோடு அரசு தலைமை மருத்துவமனையின் கண்காணிப்பாளர் தெரிவித்தார்.

Updated On: 30 April 2021 2:07 PM GMT

Related News

Latest News

  1. சோழவந்தான்
    மேலக்கால் கிராமத்தில் அடிக்கடி ஏற்படும் மின்தடையால் மக்கள் அவதி..!
  2. நாமக்கல்
    இப்படியும் ஒரு ஆச்சரியம்; ராசிபுரத்தில், பொதுத்தேர்வில் ஒரே மதிப்பெண்...
  3. கோவை மாநகர்
    தனியார் பள்ளி வாகனங்களை ஆய்வு செய்த கோவை மாவட்ட ஆட்சியர்
  4. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே வெயிட் லாஸ்... சூப்பர் ஈஸி டிப்ஸ்!
  5. லைஃப்ஸ்டைல்
    சிதறும் மனதைச் சீர் செய்யும் சில வழிகள்
  6. நாமக்கல்
    போலீசாரின் மிரட்டலுக்கு பயந்து செல்போன் டவரில் ஏறி இளைஞர் தற்கொலை...
  7. திருமங்கலம்
    அலங்காநல்லூர் அருகே பேச்சியம்மன் ஆலயத்தில் மண்டல பூஜை..!
  8. சோழவந்தான்
    அலங்காநல்லூர் அருகே காவல் ஆய்வாளர் வீட்டில் நகை, பணம் கொள்ளை..!
  9. இந்தியா
    பெரியவர்களுக்கான சிறைகளில் குழந்தைகள்..! அதிர்ச்சி அறிக்கை..!
  10. இந்தியா
    மோக வலையில் ஏவுகணை ரகசியம்: பாகிஸ்தான் சூழ்ச்சி தோல்வி