/* */

ஈரோட்டில் 1000 பவுன் நகையுடன் அடகு கடை உரிமையாளர் ஓட்டம்

ஈரோட்டில் அடகு கடை உரிமையாளர் 1000 பவுன் தங்க நகையுடன் தலைமறைவானதையடுத்து கடையினை முற்றுகையிட்டு பாதிக்கப்பட்டவர்கள் போராட்டம் நடத்தினர்.

HIGHLIGHTS

ஈரோட்டில் 1000 பவுன்  நகையுடன் அடகு கடை உரிமையாளர் ஓட்டம்
X

ஈரோட்டில் நகை அடகு கடை முன்பு திரண்ட பொதுமக்கள்.

ஈரோடு பெரியவலசு பகுதியை சேர்ந்தவர் அசோக்குமார் மற்றும் சரவணன். இவர்கள் இருவரும் அதே பகுதியில் ஆஞ்சநேயா நகை அடகு கடை என்ற பெயரில் நிறுவனம் ஒன்றை நடத்தி வந்துள்ளனர்.

கடந்த 5 ஆண்டுகளாக செயல்பட்டு வந்த இந்த நிறுவனத்தில் அப்பகுதியைச் சேர்ந்த 200க்கும் மேற்பட்டோர் சுமார் 1000 சவரன் தங்க நகையை அடமானம் வைத்துள்ளதாக கூறப்படுகிறது.


இந்த நிலையில் கடந்த ஆறு மாத காலமாக கடையை பூட்டிவிட்டு உரிமையாளர்கள் தலைமறைவாகிவிட்டதாகவும் உரிமையாளர்களை தொடர்பு கொள்ள முயற்சித்தும் பலன் அளிக்கவில்லை எனக்கூறி பாதிக்கப்பட்டவர்கள் இன்று கடையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர் .

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஈரோடு வடக்கு காவல்துறையினர் பாதிக்கப்பட்டவர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதனிடையே கடையின் பங்குதாரரான சரவணனை பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

இதுதொடர்பாக ஈரோடு வடக்கு காவல் துறையினர் சரவணணிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். 1000 சவரன் நகையுடன் அடகுக்கடை உரிமையாளர் தலைமறைவான சம்பவம் ஈரோட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Updated On: 22 Aug 2021 7:00 AM GMT

Related News

Latest News

  1. கல்வி
    2024-ல் மருத்துவ உலகை புரட்டிப்போடும் சிறந்த படிப்புகள்
  2. லைஃப்ஸ்டைல்
    திருமண நாள் வாழ்த்துக்கள்: அன்பைப் பொழிந்து, மகிழ்ச்சியைச் சொல்லும்...
  3. லைஃப்ஸ்டைல்
    "குட் நைட்" மட்டும் சொல்லாதீங்க! தமிழ்ல இப்படி சொல்லுங்க!
  4. வீடியோ
    மயிலாடுதுறையில் பலத்த காற்றுடன் மழை ! 50 ஆண்டுகள் பழமையான புளியமரம்...
  5. லைஃப்ஸ்டைல்
    என் அப்பா, என் பெருமை! பிறந்தநாள் வாழ்த்துக்கள்
  6. லைஃப்ஸ்டைல்
    என்னில் பாதியானவளுக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  7. சேலம்
    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 207 கன அடியாக அதிகரிப்பு
  8. லைஃப்ஸ்டைல்
    பக்ரீத் வாழ்த்து சொல்வோம் வாங்க..!
  9. ஈரோடு
    பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 232 கன அடியாக அதிகரிப்பு
  10. லைஃப்ஸ்டைல்
    ஆயுத பூஜை வாழ்த்துக்கள் தமிழ்: 50 பொன்மொழிகளுடன்