/* */

ஈரோடு மேம்பாலத்தில் சிக்கிய கண்டெய்னர் லாரி- பரபரப்பு

ஜவுளி பேனல்களை ஏற்றிக்கொண்டு சென்ற கண்டெய்னர் லாரி, ஈரோடு சவிதா மேம்பாலத்தில் சிக்கி நின்றதால், போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

HIGHLIGHTS

ஈரோடு மேம்பாலத்தில் சிக்கிய கண்டெய்னர் லாரி- பரபரப்பு
X

ஈரோடு கருங்கல்பாளையம் ராஜாஜிபுரத்தில் இருந்து ஒரு கண்டெய்னர் லாரி, ஹரியானா மாநிலத்திற்கு செல்வதற்காக, ஜவுளி பேனல்களை ஏற்றுக்கொண்டு பெருந்துறை சிப்காட் பகுதி நோக்கி கிளம்பி சென்றது.

ஈரோடு நாச்சியப்ப வீதி வழியாக வந்த அந்த லாரி, சவிதா பேருந்து நிறுத்தத்தை கடந்து மேம்பாலம் வழியாக சென்றபோது, திடீரென லாரியின் மேல் பகுதி மேம்பாலத்தில் சிக்கியது. இதனால் லாரி மேற்கொண்டு நகராமல் அங்கேயே நின்றது.

ஈரோடு பஸ் நிலையத்தில் இருந்து வெளியூர்களுக்கு செல்லும் பஸ்கள் நாச்சியப்பா வீதி வழியாக சவிதா பேருந்து நிலையத்தில் திரும்பி செல்வது வழக்கம். திடீரென மேம்பாலத்தின் கீழ் லாரி சிக்கியதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

கிட்டத்தட்ட 15 நிமிடங்கள் கழித்து ஒருவழியாக லாரியை, அந்த சிக்கலில் இருந்து மீட்டு, பின்னர் லாரி அங்கிருந்து கிளம்பி சென்றது. இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு நிலவியது. போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Updated On: 28 April 2021 8:20 AM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    🔴LIVE: சீமான் செய்தியாளர் சந்திப்பு | #Seeman #NTK #SrilankanTamils...
  2. லைஃப்ஸ்டைல்
    அம்மாவுக்கு சொல்லுங்க.. அவங்க ரொம்ப சந்தோஷப்படுவாங்க
  3. லைஃப்ஸ்டைல்
    கோவக்காய் சாப்பிட்டு இருக்கீங்களா? எடை குறைக்குமாம்..!
  4. லைஃப்ஸ்டைல்
    காலைப் பொழுதில் ஒரு புன்னகையுடன்: உங்கள் நாளை அழகாக்கும் ரகசியங்கள்
  5. கல்வி
    கொஞ்சம் கொஞ்சமாக காணாமல் போகும் கர்சிவ் ரைட்டிங் எனும் கையெழுத்துக்...
  6. உலகம்
    ஆறுமாத குழந்தை மீது பலமுறை துப்பாக்கிச்சூடு..! தந்தை கைது..!
  7. திருவள்ளூர்
    பழுதடைந்த குடிநீர் தொட்டியை அகற்ற கிராம மக்கள் கோரிக்கை!
  8. உலகம்
    கடந்த ஆண்டில் வெளுத்துவிட்ட உலகின் 60% க்கும் மேற்பட்ட பவளப்பாறைகள்
  9. அரசியல்
    சீனாவை எதிர்க்க இந்தியாவுக்கு தைரியம் இருக்கா? படீங்க உங்களுக்கே...
  10. சேலம்
    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 1,120 கன அடியாக அதிகரிப்பு