/* */

ஈரோடு கிழக்கில், முதலமைச்சர் ஸ்டாலின் பிரசாரத்தில் திடீர் மாற்றம்

ஈரோடு கிழக்குத் தொகுதியில் நாளை மறுநாள் திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் ஈவிகேஎஸ் இளங்கோவனை ஆதரித்து பிரசாரம் செய்கிறார்.

HIGHLIGHTS

ஈரோடு கிழக்கில், முதலமைச்சர் ஸ்டாலின் பிரசாரத்தில் திடீர் மாற்றம்
X

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் (பைல் படம்).

ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில், மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவனை ஆதரித்து கடந்த மாதம் 25-ம் தேதி முதல் திமுகவினர் பிரசாரம் செய்து வருகின்றனர். அமைச்சர்கள், மாவட்ட செயலாளர்கள் எம்பிக்கள். எம்எல்ஏக்கள், தலைமை கழக செயலாளர்கள், கட்சியின் முக்கிய நிர்வாகிகள் அனைவரும் ஈரோட்டில் முகாமிட்டு தேர்தல் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தினமும் தொலைபேசியில் தொடர்பு கொண்டு அங்குள்ள கட்சி நிர்வாகிகளிடம் தேர்தல் பணி நிலவரத்தை கேட்டறிந்து வருகிறார். ஈரோடு கிழக்குத் தொகுதியில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நாளை நாளையும், மறுநாளும் (வெள்ளி, சனி) 2 நாட்கள் வீதி வீதியாக சென்று பிரசாரம் செய்ய முதலில் நிகழ்ச்சி நிரல் தயாரிக்கப்பட்டு இருந்தது.

ஆனால், இப்போது அந்த பிரசார பயணத்தில் மாற்றம் செய்யப்பட்டு சனிக்கிழமை ஒரு நாள் மட்டும் பிரசாரம் செய்வார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் இருந்து விமானம் மூலம் நாளை மாலை கோவை வரும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அங்கிருந்து கார் மூலம் ஈரோடு ஈரோடு சக்தி சுகர்ஸ் விருந்தினர் மாளிகையில் தங்குகிறார். அங்கு கட்சியின் முக்கிய நிர்வாகிகள் தொகுதியின் மற்றும் பொறுப்பு அமைச்சர்களை சந்தித்து தொகுதி நிலவரங்களை கேட்டறிகிறார். பின்னர், மறுநாள் சனிக்கிழமை காலையில் வீதி வீதியாக சென்று ஈவிகேஎஸ் இளங்கோவனை ஆதரித்து பிரசாரம் செய்கிறார்.

Updated On: 23 Feb 2023 12:00 PM GMT

Related News

Latest News

  1. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  2. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  3. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  4. நாமக்கல்
    கொல்லிமலையில் 13 செல்போன் டவர்களை செயல்படுத்த பாஜ. கோரிக்கை
  5. தென்காசி
    தென்காசி மாவட்டத்திற்கு ரெட் அலர்ட்
  6. பூந்தமல்லி
    திருவேற்காட்டில் குடியிருப்புகளை அகற்ற எதிர்ப்பு: கண்ணில் கருப்பு துணி...
  7. நாமக்கல்
    கொல்லிமலை அருவிகளில் குளிக்கத் தடை: சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்
  8. நாமக்கல்
    நாமக்கல், திருச்செங்கோடு நகைக்கடையில் பணத்தை ஏமாந்தவர்கள் புகாரளிக்க...
  9. கல்வி
    அரசு கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்
  10. கீழ்பெண்ணாத்தூர்‎
    வேட்டவலம் அருகே கள்ளச்சாராய ஊறல் கொட்டி அழிப்பு: ஒருவர் கைது