ஈரோடு மாவட்டத்தில் 201.80 மில்லி மீட்டர் மழை
ஈரோடு மாவட்டத்தில் 201.80 மில்லி மீட்டர் மழையளவு பதிவாகி உள்ளதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
HIGHLIGHTS

பெருந்துறை சீனாபுரம் பகுதியில் நேற்று மாலை பெய்த மழையின் போது எடுக்கப்பட்ட படம்.
ஈரோடு மாவட்டத்தில் 201.80 மில்லி மீட்டர் மழையளவு பதிவாகி உள்ளதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக அவ்வப்போது மழை பெய்து வருகிறது. திங்கட்கிழமை (நேற்று) மாவட்டத்தில் பகல் நேரத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்பட்டது. இந்த நிலையில் மாலை 5 மணியளவில் திடீரென்று இடி, மின்னலுடன் மழை பெய்ய தொடங்கியது.
பின்னர் பலத்த மழை கொட்டித்தீர்த்தது. மழை நீர் சாலையில் வெள்ளம்போல் கரைபுரண்டு ஓடியது. தாழ்வான இடங்களில் மழைநீர் குளம்போல் தேங்கியது. மழை பெய்ததால் இரவில் குளிர்ந்த சீதோஷ்ண நிலை ஏற்பட்டதால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.
மாவட்டத்தில் திங்கட்கிழமை (செப்.25) நேற்று காலை 6 மணி முதல் செவ்வாய்க்கிழமை (செப்.26) இன்று காலை 6 மணி வரை பெய்த மழையின் அளவு விவரம் மில்லி மீட்டரில் பின்வருமாறு:-
ஈரோடு - 23.00 மி.மீ
கோபி - 23.20 மி.மீ ,
பவானி - 3.80 மி.மீ ,
பெருந்துறை - 75.00 மி.மீ ,
கொடுமுடி - 10.20 மி.மீ ,
மொடக்குறிச்சி - 7.00 மி.மீ ,
கவுந்தப்பாடி - 7.00 மி.மீ ,
சென்னிமலை - 22.00 மி.மீ ,
எலந்தகுட்டைமேடு - 2.40 மி.மீ ,
அம்மாபேட்டை - 17.20 மி.மீ ,
பவானிசாகர் - 1.60 மி.மீ ,
கொடிவேரி - 3.00 மி.மீ ,
வரட்டுப்பள்ளம் - 6.20 மி.மீ
மாவட்டத்தில் மொத்த மழைப்பொழிவு 201.80 மி.மீ ஆகவும், சராசரியாக மழைப்பொழிவு 11.87 சதவீதமாகவும் பதிவாகி உள்ளதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.