/* */

ஈரோடு மாவட்ட க்ரைம் செய்திகள்...

சத்தியமங்கலம் அருகே வீடு புகுந்து பெண்ணிடம் நகை பறிப்பு உள்ளிட்ட ஈரோடு மாவட்ட க்ரைம் செய்திகளின் தொகுப்பை இங்கு காண்போம்.

HIGHLIGHTS

ஈரோடு மாவட்ட க்ரைம் செய்திகள்...
X

பைல் படம்.

பெண்ணிடம் நகை பறிப்பு:-

சத்தியமங்கலம் அருகே உள்ள நல்லிகவுண்டர் தோட்டத்தை சேர்ந்தவர் பெருமாள் கவுண்டர். இவரது மனைவி பெரியம்மாள் (50). சம்பவத்தன்று இரவு 8 மணி அளவில் பெரியம்மாள் வீட்டில் சமையல் செய்து கொண்டிருந்தார். அப்போது வீட்டுக்குள் நுழைந்த மர்ம நபர்கள் 2 பேர் பெரியம்மாள் கழுத்தில் இருந்த 3 பவுன் தங்க சங்கிலியை பறித்து விட்டு தப்பிச் சென்றனர். இதுகுறித்து பெரியம்மாள் சத்தியமங்கலம் போலீசில் புகார் செய்தார். இதுகுறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

வலிப்பு நோய்க்கு வாலிபர் உயிரிழப்பு:-

ஈரோடு, மணல்மேடு பகுதியை சேர்ந்தவர் வேலுச்சாமி (60). இவரது மகன் இளங்கோ (24).இளம் வயதிலேயே மது குடிக்கும் பழக்கத்துக்கு அடிமையான இளங்கோவுக்கு நரம்பு மண்டலம் பாதிக்கப்பட்டு வலிப்பு நோய் பாதிப்புக்குள்ளாகி இருந்தார். இதற்காக அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், நேற்று அதிகாலை 2 மணியளவில் இளங்கோவுக்கு மீண்டும் வலிப்பு ஏற்பட்டது. ஈரோடு அரசு தலைமை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர், இளங்கோ ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார். இதுகுறித்து ஈரோடு தெற்கு போலீசார் விசாரிக்கின்றனர்.

முதியவர் சடலம் மீட்பு:-

கொடுமுடி மகுடேஸ்வரர் கோயில் அருகே உள்ள திருமண மண்டபம் முன்பாக சுமார் 60 வயது மதிக்கத்தக்க முதியவர் இறந்து கிடப்பதாக கொடுமுடி போலீசாருக்கு நேற்று தகவல் கிடைத்தது. அதன்பேரில், போலீ சார் சம்பவ இடத்துக்குச் சென்று முதியவர் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கொடுமுடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சுமார் 60 வயது மதிக்கத்தக்க அவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர் என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். இறந்த முதியவர் கடந்த 6 மாதமாக கொடுமுடி கோயில் அருகே தங்கி பக்தர்களிடம் பிச்சை பெற்று வசித்து வந்ததாக அப்பகுதியினர் தெரிவித்தனர்.

Updated On: 25 May 2023 3:15 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வாழைத்தண்டுகளில் நிறைந்திருக்கும் மருத்துவ நன்மைகள் பற்றி தெரியுமா?
  2. லைஃப்ஸ்டைல்
    கணவன் மனைவி ஒற்றுமையை வலுப்படுத்த ஐந்து வழிகள் என்னென்ன தெரியுமா?
  3. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே கறி மசாலா பொடி தயாரிப்பது எப்படி?
  4. லைஃப்ஸ்டைல்
    சுவையான ரசப்பொடி, வீட்டிலேயே தயாரிப்பது எப்படி?
  5. லைஃப்ஸ்டைல்
    இரவில் தூக்கமின்றி தவிக்கிறீர்களா?
  6. அரசியல்
    காங்கிரஸுக்கு அவர்கள் ஆட்சியில் இருந்தால்தான் ஜனநாயகம்: பிரதமர்...
  7. லைஃப்ஸ்டைல்
    கவலையை விரட்ட நீங்க ரெடியா?
  8. கோவை மாநகர்
    பாரதியார் பல்கலை., பகுதியில் நாய்கள் தாக்கி 3 மான்கள் உயிரிழப்பு
  9. கோவை மாநகர்
    கோவை ரயில் நிலையம் முன் குளம் போல் தேங்கிய சாக்கடை நீர் ; பயணிகள்
  10. கோவை மாநகர்
    கோவையில் போதை மாத்திரைகளை விற்பனை செய்த கும்பல் கைது