மாவட்ட தொழில் மையம், மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் ஈரோடு ஆட்சியர் ஆய்வு

மாவட்ட தொழில் மையம், மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் ஈரோடு ஆட்சியர் ஆய்வு

மாவட்ட தொழில் மையத்தில் நடைபெற்று வரும் பல்வேறு திட்டங்கள் குறித்து ஈரோடு மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா ஆய்வு மேற்கொண்டார்.

ஈரோடு மாவட்ட தொழில் மையம் மற்றும் மாவட்ட வேலைவாய்ப்பு தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா இன்று (1ம் தேதி) நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்

ஈரோடு மாவட்ட தொழில் மையம் மற்றும் மாவட்ட வேலைவாய்ப்பு தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்..

ஈரோடு மாவட்டம் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறையின் சார்பில், மாவட்ட தொழில் மையத்தில் நடைபெற்று வரும் பல்வேறு திட்டங்கள் குறித்து மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா இன்று (1ம் தேதி) நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.

தொடர்ந்து, மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஆய்வு மேற்கொண்டு, நிர்வாகம், கணக்கு, முன்னுரிமை, பதிவு மற்றும் புதுப்பித்தல், மனுக்கள், பரிந்துரைத்தல், தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம், தொழில்நெறி வழிகாட்டல், தன்னார்வ பயிலும் வட்டம், மாற்றுத்திறனாளிகள் மற்றும் உதவித்தொகை உள்ளிட்ட பிரிவுகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.


அதனைத் தொடர்ந்து, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் நடைபெறும் பல்வேறு போட்டித்தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்பு நடைபெற்றதை பார்வையிட்டார். மேலும், முதல்வரின் முகவரி, முதலமைச்சர் தனிப்பிரிவு மனு, மனு நீதி நாள் முகாம் ஆகியவற்றில் வேலைவாய்ப்பு தொடர்பாக வரப்பெற்ற மனுக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்து கேட்டறிந்தார்.


இதனையடுத்து, அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டு மாணவ, மாணவிகளுடன் கலந்துரையாடி, அங்கு வழங்கப்படும் பயிற்சிகள் குறித்தும் கேட்டறிந்தார். அதனைத் தொடர்ந்து, தொழிலாளர் துறை அலுவலகத்தில் ஆய்வு மேற்கொண்டு, குழந்தை தொழிலாளர் முறை ஒழித்தல் தொடர்பாக, வரப்பெறும் மனுக்கள் மீது மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து கேட்டறிந்தார்.


இந்த ஆய்வின்போது, பொது மேலாளர் (மாவட்ட தொழில் மையம்) திருமுருகன், அரசினர் தொழிற்பயிற்சி நிலைய பயிற்சி அலுவலர் கணேசன், தொழிலாளர் உதவி ஆணையர்கள் முருகேசன் (ச.பா.தி), மு.திருஞானசம்பந்தம் (அமலாக்கம்), உதவி இயக்குநர்கள் ஆனந்தகுமார் (அரசினர் தொழிற்பயிற்சி நிலையம்), ரா.ராதிகா (மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம்), மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் டி.டி.சாந்தி (தொழில்நெறி வழிகாட்டல்) உட்பட தொடர்புடைய துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.

Tags

Next Story
Similar Posts
புதிய தொழில்நுட்பத்தில் கமலின் மருதநாயகம்! மணியும் கமலும் போடும் திட்டம்..!
மாவட்ட தொழில் மையம், மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் ஈரோடு ஆட்சியர் ஆய்வு
சென்னை உயர் நீதிமன்றத்துக்கு புதிய நீதிபதி நியமனம்..!
சத்தியமங்கலம் அருகே தார் சாலையை சீரமைக்கக் கோரி கையெழுத்து இயக்கம்
பூஜா, ப்ரியாமணி, மமிதா இன்னும் எத்தன பேரு நடிக்கிறாங்க?
அந்தியூர் பருவாச்சியைச் சேர்ந்த 8ம் வகுப்பு மாணவன் எலிக்காய்ச்சலுக்கு உயிரிழப்பு..!
உடுமலையில்  80 ஆண்டு பாரம்பரிய நிலம் மோசடி..? முதியவர் குடும்பம் நீதி கோரி மனு..!
விமானப்படை தினத்தையொட்டி மெரினாவில் ட்ரோன் பறக்க தடை ..!
தளபதி 69 படத்தின் தலைப்பு இதுவா? அரசியல் பின்னணியோ?
உதயநிதி துணை முதல்வர்-சரியா? தவறா?  வேறு வழியில்லை என்பதே உண்மை..!
தன்னை சந்திக்க வரவேண்டாம்... உதயநிதி வேண்டுகோள்.!
பூமிக்கு அருகில் வந்துள்ள மினி நிலா: 2 மாதம் தெரியும்..!
தூய்மை இந்தியா திட்டத்தின் 10 ஆண்டு நிறைவு: கோபி நகராட்சி சார்பில் விழிப்புணர்வு பேரணி