/* */

ஈரோடு ஜவுளி மார்க்கெட்டில் அலைமோதும் கூட்டம்

தீபாவளிக்கு இன்னும் 8 நாட்களே இருப்பதால் ஈரோடு ஜவுளி மார்க்கெட்டில் வியாபாரம் களை கட்டியுள்ளது.

HIGHLIGHTS

ஈரோடு ஜவுளி மார்க்கெட்டில் அலைமோதும் கூட்டம்
X

ஈரோடு ஜவுளி கடைகளில் அலைமோதும் கூட்டம்

ஈரோடு பன்னீர்செல்வம் பார்க்கில் புகழ்பெற்ற ஜவுளி சந்தை செயல்பட்டு வருகிறது. இங்கு கேரளா, மகாராஷ்டிரா, மேற்கு வங்காளம், ஆந்திரா போன்ற வெளி மாநிலங்களில் இருந்தும் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் நூற்றுக்கணக்கான வியாபாரிகள் வந்து மொத்த விலையில் துணிகளைக் கொள்முதல் செய்து செல்வார்கள்.

வெளி இடங்களைக் காட்டிலும் இங்கு ஜவுளி ரகங்கள் குறைவான விலையில் கிடைப்பதால் இங்கு எப்போதும் மக்கள் கூட்டம் அதிகரித்துக் காணப்படும். மொத்தம் 740 கடைகள் செயல்பட்டு வந்தன. தற்போது இந்தப் பகுதியில் ஒருங்கிணைந்த ஜவுளி வணிக வளாகம் கட்டும் பணி நடந்து வருகின்றன. இதனால் தற்போது இந்தப் பகுதியில் 240 கடைகளும் சாலையைச் சுற்றி 500-க்கும் மேற்பட்ட கடை செயல்பட்டு வருகின்றன.

கொரோனா தளர்வுக்கு பிறகு தற்போது ஜவுளி வியாபாரம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. குறிப்பாக தீபாவளிக்கு இன்னும் 8 நாட்களே இருப்பதால் ஜவுளி வியாபாரம் களை கட்டியுள்ளது.இதனால் மொத்த, சில்லரை வியாபாரமும் அதிகளவில் நடந்து வருகிறது.ஜவுளி சந்தையில் மக்கள் கூட்டமும் அதிகமாக இருந்தது. திருப்பூர் பனியன் காட்டன் கவுன், சுடிதார் மசகலி சுடிதார், வேட்டி ரகங்கள், பெண்களுக்கான சேலை வகைகள், துண்டு போன்றவை அதிக அளவில் விற்பனை ஆனது.

Updated On: 27 Oct 2021 5:30 AM GMT

Related News

Latest News

  1. அரசியல்
    சீனாவை எதிர்க்க இந்தியாவுக்கு தைரியம் இருக்கா? படீங்க உங்களுக்கே...
  2. தொழில்நுட்பம்
    550 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள டிரிபிள்-ஸ்டார் சிஸ்டத்தை கைப்பற்றிய...
  3. உலகம்
    எகிப்தியர்கள் பிரமிடுகளை எவ்வாறு கட்டினார்கள் என்ற மர்மத்துக்கு...
  4. வீடியோ
    NO பருப்பு NO பாமாயில் எதனால் இந்த நிலைமை || #mkstalin #tngovt...
  5. இந்தியா
    அச்சம் தந்த அக்னி..! பயணிகள் பேருந்து தீவிபத்தில் 10 பேர் கருகி...
  6. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  7. திருவண்ணாமலை
    கிரிவலப் பாதையில் இருசக்கர வாகனத்தை திருட முயன்றவர்களை போலீசில்...
  8. திருவள்ளூர்
    திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் தீ தடுப்பு ஒத்திகை விழிப்புணர்வு...
  9. இந்தியா
    நடிகை ராஷ்மிகா பாராட்டு! பிரதமர் மோடி நெகிழ்ச்சி!
  10. உலகம்
    59 ஆண்டு கால 'லீ' அரசியல் சகாப்தம் முடிவுக்கு வந்தது எப்படி?