ஈரோடு கனி மார்க்கெட் மீண்டும் செயல் பட தொடங்கியதால் மகிழ்ச்சியில் வியாபாரிகள்

ஈரோடு கனி மார்க்கெட் மீண்டும் செயல் பட தொடங்கியதால் வியாபாரிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

HIGHLIGHTS

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
ஈரோடு கனி மார்க்கெட் மீண்டும் செயல் பட தொடங்கியதால் மகிழ்ச்சியில் வியாபாரிகள்
X

ஈரோடு கனி மார்க்கெட்டில் இன்று ஜவுளி சந்தை மீண்டும் திறக்கப்பட்டு வியாபாரம் நடைபெற்றது.

ஈரோடு பன்னீர்செல்வம் பூங்கா அருகே கனி மார்க்கெட் ஜவுளிக்கடைகள் செயல்பட்டு வந்தது. இங்கு 200-க்கும் மேற்பட்ட நிரந்தர கடைகளும், 730 வார சந்தை கடைகளும் இயங்கி வந்தன. இந்த உலகத்தில் ரூ. 54 கோடி மதிப்பீட்டில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் ஒருங்கிணைந்த ஜவுளி வணிக வளாகம் கட்டப்பட்டுள்ளது. இந்த புதிய வணிக வளாகத்தில் ஏற்கனவே கனி மார்க்கெட்டில் கடை வைத்திருக்கும் வியாபாரிகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் கடைகள் ஒதுக்கப்படும் என முதலில் கூறப்பட்டது.

ஆனால் மாத வாடகையாக ரூ. 31,500 ,வைப்புத் தொகையாக ரூ. 8 லட்சம் முதல் 12 லட்சம் வரை செலுத்த வேண்டும் என கூறியதால் யாரும் கடைக்கு செல்லவில்லை. இதனால் ஒருங்கிணைந்த வணிக வளாகம் செயல்படாமலேயே உள்ளது. இதற்கிடையே கனி மார்க்கெட்டில் உள்ள தற்காலிக கடைகளை நீதிமன்ற உத்தரவுபடி மாநகராட்சி நிர்வாகம் அகற்றியது. தீபாவளி வரை கடை நடத்திக் கொள்ள வியாபாரிகள் கோரிக்கை விடுத்தும் மாநகராட்சி நிர்வாகம் அனுமதி வழங்கவில்லை. இதை எதிர்த்து வியாபாரிகள் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்நிலையில் வருகிற டிசம்பர் 31ம் தேதி வரை பழைய இடத்தில் தற்காலிக கடைகள் செயல்பட சென்னை உயர்நீதிமன்றத்தில் வியாபாரிகள் உத்தரவு பெற்றனர். இதனையடுத்து சுமார் 40 நாட்களுக்குப் பிறகு மீண்டும் அனுமதி பெற்று கனி மார்க்கெட் பழைய இடத்தில் மீண்டும் தற்காலிக கடையில் அமைக்கும் பணி தொடங்கி நடந்து வந்தது.

சுமார் 86 கடைகள் அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வந்தது. கட்டுமான பணிகள் முடிவடைந்து மின்சார வசதிகள் செய்து கொடுக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து கனி மார்க்கெட் பழைய இடத்தில் மீண்டும் செயல்பட தொடங்கியது. இன்று வார சந்தையும் நடந்தது. பொதுவாக வார சந்தைக்கு மகாராஷ்டிரா, ஆந்திரா, கர்நாடகா, கேரளா போன்ற மாநிலங்களில் இருந்து நூற்றுக்கணக்கான வெளிமாநில வியாபாரிகள் வருவது வழக்கம்.

ஆனால் இன்று கூடிய வாரசந்தையில் குறைந்த அளவை வியாபாரிகள் வந்திருந்தனர். இதனால் மொத்த வியாபாரம் சுமாராகவே நடந்தது. அதே நேரம் உள்ளூர் மாவட்ட வியாபாரிகள் ஓரளவு வந்திருந்ததால் சில்லறை விற்பனை அஇன்று 35 சதவீதம் நடைபெற்றதாக வியாபாரிகள் தெரிவித்தனர். அடுத்த வாரம் நிறைய புது ரக துணிகள் வர இருப்பதால் வியாபாரம் சூடு பிடிக்க தொடங்கும் என வியாபாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். நீண்ட நாட்களுக்கு பிறகு ஜவுளி சந்தை செயல்பட தொடங்கியதால் அந்த பகுதியே களைகட்டத் தொடங்கியது.

Updated On: 3 Oct 2023 3:44 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    Rajju Porutham Meaning திருமணப் பொருத்தத்தில் முக்கிய பங்கு...
  2. சேலம்
    சேலம் மாவட்ட ஆட்சியரகத்தில் நோபல் பரிசு பெற்ற புத்தங்கள்: ஆட்சியர்...
  3. தமிழ்நாடு
    டெல்டா மாவட்டங்களில் மிக்ஜம் புயலால் முடங்கிய மீன்பிடி தொழில்
  4. திருமங்கலம்
    மதுரையில் அர்ஜுன் சம்பத் கைது செய்யப்பட்டதால் பரபரப்பு
  5. லைஃப்ஸ்டைல்
    New Year Wishes In Tamil 2024 புத்துணர்ச்சியைத் தரும் புத்தாண்டே ...
  6. சேலம்
    சேலத்திலிருந்து சென்னைக்கு அனுப்பப்படும் புயல் நிவாரணப் பொருட்கள்
  7. சினிமா
    பாட்டு இல்லாத படம் குற்றவாளி! அமீரின் முதல் படம் இதுதான்...!
  8. தமிழ்நாடு
    வெள்ளப்பாதிப்புகளை பார்வையிட வருகிறார் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்
  9. சிவகாசி
    சிவகாசியில் ஆதரவற்றோர் பள்ளியில் ஜெயலலிதா நினைவு தினம் அனுசரிப்பு
  10. சினிமா
    சென்னையில் வெள்ளத்தில் சிக்கிய நடிகை நமீதா பத்திரமாக மீட்பு