ஈரோட்டில் காலாண்டு விடுமுறை முடிந்து பள்ளிகள் மீண்டும் திறப்பு
ஈரோட்டில் காலாண்டு விடுமுறை முடிந்து பள்ளிகள் இன்று மீண்டும் திறக்கப்பட்டதால் மாணவ மாணவிகள் உற்சாகத்துடன் பள்ளிக்கு வந்தனர்.
HIGHLIGHTS

தமிழகத்தில் ஆறாம் வகுப்பு முதல் பன்னிரெண்டாம் வகுப்பு வரை உள்ள பள்ளி மாணவர்களுக்கு கடந்த செப்டம்பர் மாதம் 27-ந் தேதி காலாண்டு தேர்வு விடுமுறை விடப் பட்டது. விடுமுறையை கொண்டாடுவதற்காக மாணவ மாணவிகள் தங்களது சொந்த ஊருக்கு சென்றனர். அந்த வகையில் மஞ்சள் நகரமான ஈரோட்டில் இருந்தும் விடுதியில் தங்கி படித்த ஏராளமான மாணவ மாணவிகள் தங்களது சொந்த ஊருக்கு சென்றிருந்தனர்.
இந்நிலையில் காலாண்டு தேர்வு விடுமுறை முடிந்து இன்று முதல் மீண்டும் பள்ளிகள் செயல்பட தொடங்கியுள்ளது. 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு இன்று வகுப்புகள் தொடங்கியதால் மாணவ மாணவிகள் ஈரோட்டிற்கு திரும்பி தங்களது பள்ளிகளுக்கு உற்சாகத்துடன் சென்றனர்.
இதைத்தொடர்ந்து நேற்று மாலை முதல் ஈரோடு பஸ் மற்றும் ரயில் நிலையத்தில் மக்கள் கூட்டம் வழக்கத்தை விட அதிகமாக இருந்தது. சொந்த ஊருக்கு சென்றவர்கள் மீண்டும் வந்தனர். இதன் காரணமாக ஈரோடு பஸ் நிலையம் ரயில் நிலையங்களில் மாணவ மாணவிகள் மற்றும் அவர்களது பெற்றோர்கள் என கூட்டம் நிரம்பி வழிந்தது.
அதே நேரம் 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை மாணவ-மாணவிகளுக்கு வரும் 9-ந் தேதி முதல் பள்ளிகள் செயல்பட தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் தனியார் பள்ளிகள் இன்று திறக்கப்பட்டன.
அரசு பள்ளியில் படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு 2-ம் பருவத்திற்கான பாட புத்தகங்கள் இன்றுஅவர்கள் படிக்கும் பள்ளியிலேயே வழங்கப்பட்டது. இன்று காலை ஈரோடு மாநகர பகுதியில் மீனாட்சி சுந்தரனார் சாலை மிகுந்த பரபரப்புடன் காணப்பட்டது.