/* */

புரட்டாசி கடைசி சனிக்கிழமை: ஈரோடு பெருமாள் கோயில்களில் குவிந்த பக்தர்கள்

ஈரோடு மாவட்டம் முழுவதும் உள்ள பெருமாள் கோயில்களில் இன்று சாமி தரிசனம் செய்ய பக்தர்கள் குவிந்தனர்.

HIGHLIGHTS

புரட்டாசி கடைசி சனிக்கிழமை: ஈரோடு பெருமாள் கோயில்களில் குவிந்த பக்தர்கள்
X

ஈரோடு பெருமாள் கோவிலில் சாமி தரிசனம் செய்ய நீண்ட வரிசையில் காத்திருந்த பக்தர்கள்.

தமிழகத்தில் வாரத்தின் இறுதி நாட்களான வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய நாட்களில் கோயில்களில் வழிபாடு நடத்தவும், பக்தர்கள் கூடவும் தடை விதிக்கப்பட்டிருந்ததால், பக்தர்கள் கடந்த 4 வாரங்களாக சனிக்கிழமைகளில் வழிபட முடியாமல், வீட்டிலேயே வழிபாடு நடத்தி வந்தனர்.

இந்நிலையில், தமிழக அரசு வாரத்தின் அனைத்து நாட்களிலும் கோவில்களுக்கு சென்று வழிபாடு நடத்தலாம் என உத்தரவிட்டது. இதன்பேரில், புரட்டாசி கடைசி சனிக்கிழமையான இன்று ஈரோடு மாவட்டம் முழுவதும் பெருமாள் கோயில்களில் பக்தர்கள் கூட்டம் அதிகாலை முதலே அலைமோதியது. இதில், ஈரோடு - பவானி ரோட்டில் உள்ள பெருமாள்மலையில் அதிகாலை முதலே பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து மூலவரை வழிபட்டு சென்றனர். மேலும், கூடுதுறை ஆதிகேசவபெருமாள் கோயில், ஈரோடு கோட்டை கஸ்தூரி அரங்கநாதர், கவுந்தப்பாடி வரதராஜபெருமாள் உள்ளிட்ட மாவட்டம் முழுவதும் உள்ள பல்வேறு பெருமாள் கோயில்களில் பக்தர்கள் வழிபட்டு சென்றனர்.

Updated On: 16 Oct 2021 3:30 PM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    தமிழகத்தில் தேனி, விருதுநகர், தென்காசி மாவட்டங்களுக்கு கனமழை...
  2. இந்தியா
    தொலை தொடர்புத் துறை பெயரில் போலி அழைப்புகள்: மத்திய அரசு எச்சரிக்கை
  3. லைஃப்ஸ்டைல்
    அன்னைக்கு இன்னைக்கு பிறந்தநாள்..! வாழ்த்துகிறோம்..!
  4. லைஃப்ஸ்டைல்
    வார்த்தைகளால் பூ தொடுத்து அக்காவுக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  5. இந்தியா
    உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த நான்கு மாத குழந்தை!
  6. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி கோர்ட்டில் ஆஜர்: சவுக்கு சங்கர் லால்குடி கிளை சிறையில்...
  7. லைஃப்ஸ்டைல்
    வீட்டில் இருந்தபடியே பெண்கள் சம்பாதிப்பது எப்படி?
  8. ஆன்மீகம்
    நடப்பாண்டில் வைகாசி விசாகம் எப்போது வருகிறது தெரியுமா?
  9. லைஃப்ஸ்டைல்
    ருசியான எண்ணெய் கத்திரிக்காய் கிரேவி செய்வது எப்படி?
  10. கல்வி
    எமிஸ் தளத்தில் பொது மாறுதல் கேட்டு விண்ணப்பித்த 13,484 ஆசிரியர்கள்