ஈரோட்டில் அஞ்சல்துறை குறைகேட்பு கூட்டம்
![ஈரோட்டில் அஞ்சல்துறை குறைகேட்பு கூட்டம் ஈரோட்டில் அஞ்சல்துறை குறைகேட்பு கூட்டம்](https://www.nativenews.in/h-upload/2022/03/12/1495479-1495449-postal.webp)
பைல் படம்
முதுநிலை அஞ்சலகக் கண்காணிப்பாளர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
ஈரோடு அஞ்சல் கோட்டப் பகுதி பொதுமக்கள் குறைகேட்பு நாள் கூட்டம் மார்ச் 18ஆம் தேதி நடைபெறவுள்ளது. அன்றைய தினம் காலை 11 மணி முதல் 12 மணி வரை ஈரோடு முதுநிலை அஞ்சலகக் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நடைபெறவுள்ள இக்கூட்டத்தில் அஞ்சல் துறை சேவைகள் குறித்த குறைகள். கோரிக்கைகளை பொதுமக்கள் தெரிவிக்கலாம்.
பொதுமக்கள் தங்களது மனுக்களை மார்ச் 15ஆம் தேதிக்குள் முதுநிலை அஞ்சலகக் கண்காணிப்பாளர், ஈரோடு கோட்டம், ஈரோடு 638001.என்ற முகவரிக்கு அனுப்பிவைக்க வேண்டும் தபாலின் மேல் குறைகேட்பு நாள் மனு என குறிப்பிட்டு அனுப்பிவைக்க வேண்டும்.மேலும், மார்ச் 15ஆம் தேதி வரை வேலை நாள்களில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மேற்குறிப்பிட்ட அலுவலகத்தில் புகார் மனுக்கள் பெற்றுக் கொள்ளப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu