/* */

காங்கிரஸ் கட்சியில் இணைந்த மக்கள் நீதி மைய கட்சி நிர்வாகிகள்

ஈரோடு மாவட்டத்தில் மக்கள் நீதி மையம் கட்சியை சேர்ந்த 300க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் காங்கிரஸ் கட்சியில் இணைந்தனர்.

HIGHLIGHTS

காங்கிரஸ் கட்சியில் இணைந்த மக்கள் நீதி மைய கட்சி நிர்வாகிகள்
X

ஈரோடு மாவட்டத்தில் நடைபெற்ற காங்கிரஸ் கூட்டம்.

ஈரோடு மாவட்டத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் மக்கள் நீதி மையம் கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் காங்கிரஸ் கட்சியில் இணையும் விழா இன்று நடந்தது. இவ்விழாவிற்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் பொதுச் செயலாளர் மற்றும் ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் திருமகன் ஈவெரா தலைமை வகித்தார்.

விழாவில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் மாவட்ட இளைஞரணி செயலாளர் அல்டிமேட் தினேஷ் தலைமையில் அக்கட்சியின் 300க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் காங்கிரஸ் கட்சியில் இணைந்தனர். விழாவிற்கு சிறப்பு விருந்தினராக ஈரோடு மாவட்ட காங்கிரஸ் கட்சியின் தலைவர் இ பி ரவி முன்னிலையில் மாற்றுக் கட்சியினர் காங்கிரசில் இணைந்தனர்.

மேலும் காங்கிரஸ் கட்சியின் மாநில மாவட்ட மாநகர நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டு மாற்றுக் கட்சியில் இருந்து புதிதாக இணைந்த அல்டிமேட் தினேஷ், சபீக் அலி, சுதா, ஜுபைர் அகமது, முகமது இஸ்மாயில் உள்ளிட்ட நிர்வாகிகளுக்கு பொன்னாடை அணிவித்து உற்சாக வரவேற்பு அளித்தனர்.

Updated On: 1 Dec 2021 5:00 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    மத்தியபிரதேச மாநிலத்தில் தீப்பிடித்து எரிந்த வாக்குப்பதிவு...
  2. அரசியல்
    தமிழர்களை நிறத்தின் அடிப்படையில் பேசுவதா? காங்கிரசுக்கு பிரதமர் மோடி...
  3. சினிமா
    அச்சச்சோ அச்சச்சோ அச்சச்சோ பாடல் வரிகள்!
  4. லைஃப்ஸ்டைல்
    கவிதைக்கு பொய் அழகா..? அழகுக்கு கவிதை மெய்யா..?
  5. கவுண்டம்பாளையம்
    ரத்தினபுரியில் இருசக்கர வாகனம் திருட்டு ; போலீசார் விசாரணை..!
  6. கோவை மாநகர்
    டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி மாநகர காவல் ஆணையரிடம் மனு
  7. பொள்ளாச்சி
    பொள்ளாச்சி அருகே சாலை விபத்தில் இருவர் உயிரிழப்பு..!
  8. லைஃப்ஸ்டைல்
    விழுவதும் எழுவதும் குழந்தை பருவத்தே கற்ற பாடம்..!
  9. ஈரோடு
    ஈரோடு மாவட்டத்தில் குடிநீர் விநியோக ஆய்வுக் கூட்டம்..!
  10. லைஃப்ஸ்டைல்
    உயிரோடு கலந்த உறவு மனைவி..! உயிரும் மெய்யும் கலந்த உறவு..!