/* */

மதுக்கடையால் 'குடி'மகன்களுக்கு கொண்டாட்டம்: பொதுமக்களுக்கு திண்டாட்டம்

அவல்பூந்துறை அருகே லட்சுமி நகரில், மையப்பகுதியில் அமைந்துள்ள மதுபானக்கடையால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகின்றனர்.

HIGHLIGHTS

மதுக்கடையால் குடிமகன்களுக்கு கொண்டாட்டம்: பொதுமக்களுக்கு திண்டாட்டம்
X

ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி அருகே, அவல்பூந்துறை செல்லும் வழியில் உள்ள லட்சுமி நகரில் பொது மக்கள் குடியிருப்பு மையப்பகுதியில் மதுபானக்கடை அமைந்துள்ளது.

பொதுமக்கள் குடியிருப்பு அருகாமையில், மையப்பகுதியில் உள்ள மதுபான கடையில், மதுப் பிரியர்கள் மது அருந்திவிட்டு சாலையில் அமர்ந்து கொண்டு, தகாத வார்த்தைகள் பேசி வருவதாலும், பெண்களைக் கேலி கிண்டல் செய்து மதுபாட்டில்களை உடைத்து அராஜகம் செய்து வருவதாலும் பலரும் அஞ்சுகின்றனர். கல்லூரி மாணவர்கள், பள்ளி குழந்தைகள் என அனைவரும் முகம் சுளித்து நிலைமை உருவாகியுள்ளது.

இப்பகுதியில் உள்ள மதுபானக்கடையை அகற்ற, ஈரோடு மாவட்ட ஆட்சியர் முதல், முதல்வரின் தனிப்பிரிவு வரை, புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்காததால், இப்பகுதியில் உள்ள மதுபானக்கடையை அகற்ற பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Updated On: 29 Oct 2021 1:45 PM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    தன்மானம் சீண்டப்படும்போது..துணிந்து நில்லுங்கள்..!
  2. தேனி
    தேனி சமதர்மபுரம் நாடார் மண்டகப்படி திருவிழா..!
  3. லைஃப்ஸ்டைல்
    கருத்து கந்தசாமிகளே..நீங்களும் இதை படிங்க...!
  4. லைஃப்ஸ்டைல்
    விநாயகருக்குப் பிடித்த விருந்துகள்: சதுர்த்தி ஸ்பெஷல் படையல் செய்வது...
  5. தென்காசி
    தென்காசி மாவட்டத்தில் அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  6. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  7. ஆன்மீகம்
    “மின்சாரம் வேறு மின்சார பல்புகள் வேறு” யார் சொன்னது..?
  8. லைஃப்ஸ்டைல்
    பெண்மையை போற்றும் பெருவிழாவும் மகளிர் தின வாழ்த்துக்களும்
  9. லைஃப்ஸ்டைல்
    ரமலான் வாழ்த்துக்கள்: தமிழில் நம்பிக்கையின் ஒளி
  10. வீடியோ
    🔴LIVE : சவுக்கு சங்கர் மீது மேலும் ஒரு புகார் வீரலட்சுமி பரபரப்பு...