/* */

ஈரோடு அருகே கார் தீப்பிடித்து எரிந்ததில் 3 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிப்பு

ஈரோடு அருகே கார் தீப்பிடித்து எரிந்ததில் 3 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

HIGHLIGHTS

ஈரோடு அருகே கார் தீப்பிடித்து எரிந்ததில் 3 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிப்பு
X

தீப்பிடித்து எரிந்து சேதமான கார்.

ஈரோடு அடுத்த மூலப்பாளையம் அருகே உள்ள பாரதிபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் செல்வராஜ் 43, நிதி நிறுவனம் நடத்தி வருகிறார். இவரது மனைவி கவிதா (36) மகள் மிதுன்ஷா (5). குடும்பத்துடன் நேற்று மாலை குலதெய்வம் கோயிலுக்கு காரில் சென்றுள்ளனர்.

மூலப்பாளையம் அடுத்த ஆனைக்கல்பாளையம் அருகே செல்லும்போது காரின் முன் பகுதியிலிருந்து புகை வந்துள்ளது. உடனடியாக மூவரும் காரில் இருந்து வெளியே வந்தனர். அப்போது கார் மளமளவென தீ பிடித்து எரிந்தது.

இதுகுறித்து மொடக்குறிச்சி தீயணைப்புத் துறையினருக்கு கொடுத்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் தீயை அணைத்தனர். ஆனால் கார் முற்றிலும் தீப்பிடித்து எரிந்து சாம்பலானது. இதுகுறித்து ஈரோடு தாலுகா போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Updated On: 1 March 2022 3:30 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ஆசையுடன் அப்பாவுக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  2. வீடியோ
    Bhagyaraj மருமகளுடன் குத்தாட்டம் போட்ட Gayathri Raghuram ! #dance...
  3. லைஃப்ஸ்டைல்
    ரமலான் வாழ்த்துச் சொல்வோம் வாங்க..!
  4. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  5. லைஃப்ஸ்டைல்
    நண்பனின் பிறந்தநாளில் வேடிக்கையா கலாய்க்கலாம் வாங்க
  6. லைஃப்ஸ்டைல்
    வேடிக்கையான பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
  7. வீடியோ
    பெண் வேடத்தில் வந்த Cool Suresh ! அரண்டுபோன K Raja !#coolsuresh...
  8. இந்தியா
    ஒருபோதும் இந்து அல்லது முஸ்லீம் என்று சொல்லவில்லை: பிரதமர் மோடி
  9. லைஃப்ஸ்டைல்
    சாப்பாட்டுக்கு முன்னும் பின்னும் டீ, காபியை தவிர்க்க வேண்டுமாம்....
  10. இந்தியா
    NewsClick நிறுவனரை கைது செய்தது செல்லாது, உடனடியாக விடுதலை செய்ய...