ஜவுளி வியாபாரியிடம் சோதனை..! பறக்கும் படையினர் 1 லட்சம் ரூபாய் பறிமுதல்..!

ஜவுளி வியாபாரியிடம் சோதனை..! பறக்கும் படையினர் 1 லட்சம் ரூபாய் பறிமுதல்..!
X
ஜவுளி வியாபாரியிடம் சோதனை.பறக்கும் படையினர் 1 லட்சம் ரூபாய் பறிமுதல்.அதை பற்றி இப்பதிவில் காணலாம்.

ஈரோட்டில் திங்கள் கிழமை அன்று நடைபெறும் ஜவுளி சந்தைக்கு தமிழகத்தின் பல்வேறு மாவட்டத்தில் இருந்தும் வெளி மாநிலத்தில் இருந்தும் ஜவுளி வியாபாரிகள் வந்து ஜவுளி ரகங்களை மொத்தமாக கொள் முதல் செய்து வருகின்றனர்.

தேர்தல் பறக்கும் படையினர் நடவடிக்கை

தேர்தல் பறக்கும் படையினர் பன்னீர் செல்வம் பூங்கா அருகே ஜவுளி சந்தை பகுதியில் சோதனை நடத்திய போது கேரளா மாநிலத்தில் இருந்து வந்த முஸ்தபா என்ற ஜவுளி வியாபாரியிடம் 1- லட்சம் ரூபாய் பறிமுதல் செய்தனர்.

அதிகாரிகள் தெரிவிப்பு

பறிமுதல் செய்யப்பட்ட பணம் தொடர்பாக தேர்தல் கட்டுப்பாட்டு அலுவலகம் மூலமாக மாவட்ட கருவூலத்தில் ஒப்படைக்க பட்டு உரிய ஆவணங்களை கொடுத்து பணத்தை பெற்றுக்கொள்ள வேண்டும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags

Next Story
ai in future agriculture