ஈரோடு மாவட்டத்தில் இன்று புதிதாக 78 பேருக்கு கொரோனா பாதிப்பு; மூதாட்டி உயிரிழப்பு

X
பைல் படம்.
By - S.Gokulkrishnan, Reporter |12 Oct 2021 9:15 PM IST
ஈரோடு மாவட்டத்தில் இன்று 82 பேர் கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
ஈரோடு மாவட்டத்தில் நேற்று 8 ஆயிரத்து 495 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டதில் 75 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. இந்த நிலையில் இன்று புதிதாக 78 பேருக்கு தொற்று உறுதியானது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1 லட்சத்து 2,878 ஆக உயர்ந்தது.
இதில் 1 லட்சத்து 1,272 பேர் குணமடைந்தார்கள். இன்று மட்டும் 82 பேர் கொரோனாவில் இருந்து மீண்டு உள்ளார்கள். தற்போது 929 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
கடந்த 10ம் தேதி 80 வயது பெண் ஒருவர் கொரோனாவால் உயிரிழந்தார். இதுவரை கொரோனாவுக்கு 677 பேர் பலியாகி உள்ளனர்.
Next Story
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu