Begin typing your search above and press return to search.
ஈரோடு மாவட்டத்தில் இன்று 90 பேருக்கு கொரோனா
ஈரோடு மாவட்டத்தில் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த 103 பேர் நேற்று சிகிச்சை முடிந்து வீடு திரும்பினர்.
HIGHLIGHTS
ஈரோடு மாவட்டத்தில் நேற்று 8 ஆயிரத்து 242 பேருக்கு பரிசோதனை செய்ததில், 93 பேருக்கு கொரோனா தொற்று இருந்தது. இந்த நிலையில் இன்று சுகாதாரத்துறை சார்பில் வெளியிடப்பட்ட பட்டியலின்படி ஈரோடு மாவட்டத்தில் புதிதாக 90 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதனால் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1,02,430 ஆக உயர்ந்தது.
அதே நேரத்தில் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த 103 பேர் நேற்று சிகிச்சை முடிந்து வீடு திரும்பினர். மாவட்டத்தில் இதுவரை மொத்தம் 1,00,687 பேர் கொரோனா தொற்றில் இருந்து மீட்டுள்ளனர். மாவட்டத்தில் இதுவரை கொரோனாவுக்கு 673 பேர் பலியாகி உள்ள நிலையில் தற்போது தொற்று உள்ள 1,070 பேர் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.