/* */

பர்கூர் அருகே நள்ளிரவில் 108 ஆம்புலன்ஸை வழிமறித்த யானைகள்

அந்தியூர் அருகே பர்கூர் மலைப் பாதையில் ஆம்புலன்சை யானைகள் குறுக்கிட்டதால் 108 ஆம்புலன்சில் பெண்ணுக்கு குழந்தை பிறந்தது.

HIGHLIGHTS

பர்கூர் அருகே நள்ளிரவில் 108  ஆம்புலன்ஸை வழிமறித்த யானைகள்
X

வழிமறித்த யானை.

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள பர்கூர் ஓசூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் இரவு 11.50 மணியளவில் மலைப்பகுதியைச் சார்ந்த நந்தினி என்ற கர்ப்பிணி பெண் பிரசவத்திற்கு 108 ஆம்புலன்ஸ் மூலம், அந்த அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். வரும் வழியில் மணியாச்சி அருகே வரதள்ளம் என்ற இடத்தில் செல்லும் போது மலைப்பாதையில் யானைகள் குறுக்கிட்டதால் 108 ஆம்புலன்ஸ் மலைப்பாதையில் நிறுத்தப்பட்டது.

அந்தப் பெண் பிரசவ வலியால் மிகவும் ஆபத்தான நிலையில் இருந்ததால் யானைகள் கூட்டம் கலைந்து செல்லாமல் அதிக நேரம் அதே இடத்தில் இருந்ததால் அந்தப் பெண்ணின் நிலை கண்டு 108 ஆம்புலன்சில் உள்ள மருத்துவ உதவியாளர்கள் யானை சென்ற பிறகு மணிபள்ளம் என்ற இடத்தில் நள்ளிரவு 12.10 மணி அளவில் அந்த பெண்ணுக்கு பிரசவம் பார்த்தனர். பிரசவத்தில் அந்தப் பெண்ணிற்கு அழகான பெண் குழந்தை பிறந்துள்ளது. பின்னர் 108 ஆம்புலன்ஸ் மூலம் அந்தியூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். 108 ஆம்புலன்சில் மலைப்பாதையில் பெண்ணுக்கு குழந்தை பிறந்தது பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Updated On: 2 Dec 2021 10:45 AM GMT

Related News

Latest News

  1. மேட்டுப்பாளையம்
    கோவில்பாளையம் பகுதியில் 2 கிலோ கஞ்சா சாக்லேட் பறிமுதல்..!
  2. தொழில்நுட்பம்
    சந்திரனில் முதல் ரயில் பாதை அமைக்க நாசா திட்டம்
  3. லைஃப்ஸ்டைல்
    கரம் கொடுத்த நீ, பிரியாத வரம் ஒன்று தாராய்..!
  4. லைஃப்ஸ்டைல்
    காதல் வானில் பறக்கும் ஜோடிக் கிளிகளுக்கு வாழ்த்துகள்..!
  5. வீடியோ
    🤔Ilaiyaraaja அப்புடி என்ன பண்ணிட்டாரு?RV Udhayakumar OpenTalk...
  6. லைஃப்ஸ்டைல்
    இதயமே நீதானே என் அன்பே..! உன்னை சரணடைந்தேன்..!
  7. இந்தியா
    வாக்காளரை அறைந்த ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் எம்எல்ஏ! திருப்பி அறைந்த...
  8. இந்தியா
    மும்பையில் புழுதி புயல், மழை: இயல்பு வாழ்க்கை பாதிப்பு
  9. உலகம்
    பெண்கள் உதட்டில் லிப்ஸ்டிக் பூசிக்கொள்ள தடை எந்த நாட்டில் என...
  10. வீடியோ
    பொண்ண பணத்துக்காக ஏமாத்தி சீரழிச்சான் | Perarasu கிளப்பிய சர்ச்சை...