/* */

கொளுத்தும் வெயில்: ஈரோடு தொகுதியில் 1 மணி வரை 42.23 சதவீத வாக்குப்பதிவு..!

ஈரோடு நாடாளுமன்றத் தொகுதியில் மதியம் 1 மணி நிலவரப்படி 42.23 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.

HIGHLIGHTS

கொளுத்தும் வெயில்: ஈரோடு தொகுதியில் 1 மணி வரை 42.23 சதவீத வாக்குப்பதிவு..!
X

ஈரோடு நாடாளுமன்றத் தேர்தல் - 2024.

ஈரோடு நாடாளுமன்றத் தொகுதியில் மதியம் 2 மணி நிலவரப்படி 42.23 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.

மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஈரோடு நாடாளுமன்றத் தொகுதியில் இன்று காலை 7 மணிக்குத் தொடங்கி மிக அமைதியான முறையில் நடைபெற்று வருகிறது. வாக்குப்பதிவு தொடங்கியது முதலே பொதுமக்கள் தங்களது வாக்குகளை பதிவு செய்வதில் ஆர்வம் காட்டி வருகிறார்கள்.

இந்நிலையில், ஈரோடு தொகுதி முழுவதும் இதுவரை பதிவாகியுள்ள வாக்குப்பதிவு சதவீதத்தை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. அதன்படி, 9 மணி நிலவரப்படி 13.37 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டது. தொடர்ந்து, 11 மணி நிலவரப்படி 25.37 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது.

அதனைத் தொடர்ந்து, வாக்குப்பதிவு தொடங்கி 6 மணி நேரத்தில் அதாவது இன்று மதியம் 1 நிலவரப்படி ஈரோடு நாடாளுமன்றத் தொகுதியில் 42.23 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது.

மேலும், இன்று காலை 7 மணிக்குத் தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணிக்கு நிறைவடையவிருக்கிறது. கடைசி நிமிஷங்களில் வருவோருக்கு டோக்கன்கள் வழங்கப்பட்டு அவர்களுக்கு வாக்களிக்க வாய்ப்பு அளிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Updated On: 22 April 2024 12:38 PM GMT

Related News

Latest News

  1. அரசியல்
    ‘நான் செத்துட்டேன்’ லால்குடி திமுக எம்எல்ஏ செளந்தரபாண்டியன் திடீர்...
  2. சோழவந்தான்
    சோழவந்தான் அருகே தென்கரையில் டி.ஆர். மகாலிங்கத்துக்கு நூற்றாண்டு...
  3. திருவள்ளூர்
    பெரியபாளையம் பகுதியில் அறிவிக்கப்படாத மின்வெட்டால் பொதுமக்கள் அவதி
  4. திருப்பரங்குன்றம்
    மதுரை: எடப்பாடி பழனிசாமியை வரவேற்க வந்த அதிமுகவினர் போலீசாருடன்...
  5. நாமக்கல்
    மதுரை - பெங்களூரு வந்தே பாரத் ரயில் நாமக்கல்லில் நின்று செல்ல...
  6. உசிலம்பட்டி
    உசிலம்பட்டி அருகே கழிவு கிட்டங்கியில் தீ விபத்து
  7. நாமக்கல்
    பொத்தனூர் பச்சைமலை முருகன் கோவிலுக்கு புதிய கிரிவலப்பாதை
  8. நாமக்கல்
    வளையப்பட்டி பகுதியில் 18ம் தேதி மின்சார நிறுத்தம் அறிவிப்பு
  9. இந்தியா
    என்னது..கல்யாணத்துக்கு மாப்பிள்ளை இதெல்லாம் கேட்டாரா..?
  10. நாமக்கல்
    ஆனி மாத முதல் ஞாயிற்றுக்கிழமை ஆஞ்சநேயருக்கு சிறப்பு அலங்காரம்